Tuesday 29 October 2013

கடவுளின் ஏஜண்டும் நானும் .

எனது கணவரின் நண்பனாக ஆரம்பித்து பிறகு குடும்ப நண்பராக ஆனா ஒருவர்
எப்போதுமே தான்  நல்லதை நினைக்கும் யோகி போலவும் அவர் சொல்வதை மற்றவர்கள் மறுமொழி கூறாமல் கடைப் பிடிக்கவேண்டும் .அவர் சொல்வதுவே  அந்த குறிப்பிட்ட விஷயத்தின் இறுதி மொழி என்று நினைப்பவர்.
அவ்வளவு விஷய ஞானம் இல்லாதவர் ,நுனிப்புல் மேயும் டைப் .
வீட்டு வேலைகள் செய்வதில் ஆர்வமில்லை .
அதைத் தவிர்ப்பதற்காகவே
தன்னை ஒரு உண்மை தேடும் ஞானி என்கிற ஒரு  இமேஜு உருவாக்குவதில்
ரொம்பவே முனைப்பு .
மனைவி பாவம் ஏதேதோ  ஆப்பரேஷன்கள் செய்து கொண்டவர்.  
முதலில் எங்களுக்கு அறிமுகமான போது ஒரு யோகாசன பயிற்சி
மையத்தில் சேர்ந்து அதை தினமும் செய்து வந்தார் .
 இதை நெ1 யோகா என்று பெயரிடுவோம் .
நானும் இதற்கு முன்பே ஒரு யோகா கிளாசில் சேர்ந்தேனே தவிர ஒரு இரண்டு மாதம் தான் பயிற்சி செய்தேன் . தொடர்ந்து செய்ய முடியவில்லை .
காரணம் காலை எழுந்தவுடன் பிரஷர் குக்கர் ,பால் குக்கர் இவைகள் தான் என் கண்ணில் தெரிந்ததே தவிர மனமும் உடலும்  மூச்சுப் பயிற்சிப் பக்கம் போக மறுத்தது.
என் மைனஸ் பாயிண்டுகள் எனக்குத் தெரியும் என்பதால் எத்தனையோ யோகா மையங்கள்  தூண்டில்  போட்டு  இழுத்தாலும் நான் அந்த வலையில் சிக்காமல்  அதன் பின் யோகா கிளாஸ் பக்கம் தலை ,கால் எதுவுமே வைத்துப் படுப்பதில்லை .
என்னை ரொம்பவும் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனார்.
போனேனே தவிர எப்போதும் போல ..........புத்தகம் மட்டுமே கண்ணில் படும்படி கொஞ்ச நாள் வைத்திருந்துவிட்டு பிறகு அதையும் தூக்கி உள்ளே வைத்துவிட்டேன்.
பிறகு கொஞ்ச நாள் கழித்து எங்கோ வேறு ஒரு யோகா கிளாஸ் போனார் .
இப்பொழுது இந்த யோகா  ( நெ 2 என்று பெயரிடுவோமே )
நெ1 யோகா  வை விடவும் சிறந்தது என்றும்  என்னை சேரச்சொல்லியும்
வற்புறுத்தினார் ,
நான் அசையவில்லை .
என் மகன்களிடமும் இது பற்றி பேசினார் .மகன்களிடம் அவரின் பேச்சு எடுபடவில்லை .படிக்க வேறு ஊர் போய்விட்டதால் அவர்கள் தப்பித்தார்கள் ,ஆனால்
என் கணவர் அவர் சொன்னதெல்லாம் செய்தார் .
பிறகு  கொஞ்ச நாள் கழித்து நெ 3 யோகா மையம் .
வழக்கப்படி என்னிடம் மார்க்கெட்டிங் .
நான் மசியவில்லை .
நான்காவதாக நெ 4 யோகா .
மறுபடியும் என்னிடம் விடாப்பிடியாக மார்க்கெட்டிங் .
என் கணவரையும் வீட்டில் வேலை எதுவும் செய்ய விடாது யோகா அது இது என்று  அலைக்கழித்து மூளைச் சலவை செய்தார் .
அவரின் மனைவியிடமும் இது பற்றி விலாவரியாக பேசி என் வீட்டு ஆட்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லியும் அந்த அம்மா  நான் ஏதோ பாட்டி வடை சுட்ட கதை சொல்கிறேன் என்கிற பாணியில் தான் கேட்டார் .

,கணவனிடம் பேசிய மாதிரி தெரியவில்லை .

 எனக்குத் தெரியாமல் என் கணவரிடம் கண்ட மேனிக்கு பல விதமான யோகா கிளாசு பற்றி விவாதிப்பது
,ஏதோ இவர் சொன்னதைக் கேட்டால் சொர்க்கத்திற்கு கன்ஃ பர்ம்டு  டிக்கெட் கிடைக்கும் மற்றவர்களுக்கு லெட்ரின்
பக்கம் உட்காந்து போகக் கூட இடம் கிடைக்காது என்கிற பாணியில் பேச்சு.
விடாப்பிடியாக என்னிடம் ஒரு நாள் நீங்கள் என்னைத் தப்பாக புரிந்துகொள்கிறீர்கள் ?
நான் கடவுளிடம் உங்களை அழைத்துச்செல்லும்  ஒரு  வழிகாட்டி போலத்தான்
என்றார் .
என்னைப்  பொருத்தவரை எனக்கும் கடவுளுக்கும் இடையே யாரும் தேவையே இல்லை .
எனக்குத் தோணினால் கடவுளுக்கு நன்றி சொல்வேன் .
நான் நினைத்தபடி காரியங்கள் நடக்கவில்லை என்றால் திட்டி இருக்கிறேன் .
நல்லது செய்தால்   Performance linked bonus

  மாதிரியெல்லாம் கடவுளுக்கு கொடுத்திருக்கிறேன் .
அதைக் கொடு இதைக் கொடு என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்
நீ மட்டும் இதைச் செய்யலேன்னா  என்கிற தோரணையில்  மிரட்டியும்
இருக்கிறேன் .
எங்க அன்யோன்யம் அப்படி .
எனவே
எந்த ஒரு ஏஜெண்டும் வைத்துக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை
 என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டேன் .
மனிதன் அசரவில்லை .
திரும்பவும் உங்கள் நல்லதிற்குத்தான் சொல்கிறேனே தவிர .......என்று இழுத்தார்
நானும் அசராமல்
" நான் அப்போ  உங்கள் நல்லதிற்கு எது சொன்னாலும் கேட்பீர்களா   "
என்றேன் .
அவரின்  நாக்கி சனி பூந்தது அவருக்குத் தெரியவில்லை .

 "நிச்சயமாக மேடம் .நல்லது யார்  சொன்னாலும் கேட்பதுதானே முறை "என்று
சாமர்த்தியமாக  பதில் சொல்கிறதாக நினைத்துக்கொண்டார்.
  அவருக்கு அப்போது வயது 58 தாண்டிவிட்டது .
நீங்கள் ஏன் சீன மொழி அல்லது ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ளக்கூடாது ?
அறிவும் வளரும் மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட்  பணமும் வரும்
ஐயய்யோ .இந்த வயசிலா என்றார் .
ஏன் உங்களை விட வயதானவர்கள் எவ்வளவோ சாதித்து  இருக்கும் போது ஏன் ?
சரி பரவாயில்லை உங்கள் மனைவியிடம் பேசவா இது பற்றி என்றேன்
ஐயய்யோ  வேணாம் அவங்க படிக்கப் போய்ட்டா  அப்புறம் எல்லா வேலையும் என்தலையிலே விழும் வேணாம் மேடம் பிளீஸ் ..
.பிளீஸ்  கெஞ்சல் என்காலில் விழாத குறை ..
அன்னைக்கு பேசினவர்தான்.
மூணு  வருஷம் ஆச்சு . நான் போன் பண்ணினாக் கூட எடுக்கறதே இல்லை 

7 comments:

  1. இனி சுபம் தான்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஹஹஹஹா சூப்பர்.... ஆள் அம்பேல்

    ReplyDelete
  3. நல்ல சமயோசித புத்தி உங்களுக்கு..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நிம்மதியாக இருங்கள். இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

  5. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  6. இதுபோன்ற எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் பலர் உண்டு... எனக்குத் தெரிந்த ஒருவர் (சொந்தக்காரர் தான்) ஒரு நிறுவனத்தின் விற்பனை ஏஜன்சி எடுத்து என்னை மூளைச் சலவை செய்து பார்த்தார்... உறவுகளுக்குள் பிசினஸ் வேண்டாம் என்று நறுக்கென்று சொல்லிவிட்டேன்...

    ReplyDelete
  7. ஹா...ஹா... சூப்பர்....


    பத்தாயிரம் ரூபா மதிப்புள்ள
    கூகிள் நெக்சஸ் டேப்ளட்
    இலவசமா கொடுக்கிறாங்களாம்...
    லிங்கை கிளிக் பண்ணுங்க...
    நீங்களும் ட்ரைப் பண்ணுங்க...
    கூகிள் நெக்சஸ் 7 டேப்ளட் பிசி இலவசம்..!

    ReplyDelete