Wednesday 28 July 2021

Bonzaai ஸ்நாக்ஸ்

 

பச்சை காய்கறிகள் சாப்பிடுகிறேன் என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள். ஜப்பானில் மீனை பச்சையாக சமைக்காமல் சாப்பிடுவார்கள் .அதனால் அவர்கள் சருமம் பள  பள என்று இருக்கும்

ஆனால் எனக்கோ கறிகாய் பச்சையாகச்  சாப்பிடுவதில் அவ்வளவு இஷ்டம் கிடையாது .அதனால் எனக்கு தெரிந்த வழியில் நானும் கெத்து காட்டவேண்டும் என்று நினைத்தேன்.சரி .

 நம்மளும் புதுமாதிரியாக ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் என்று யோசித்ததன் விளைவுதான் இந்த சுவையான ஸ்நாக் .

 இது ரொம்பவே ஈஸியான ஒரு சிற்றுண்டி.

தேவையான பொருட்கள்:

 கடலை பருப்பு 100 கிராம்

 சிகப்பு  மிளகாய் தேவைக்கேற்ப

 உப்பு   சிறிதளவு

பெருங்காயம்

சிறிதளவு இஞ்சி

 இவை மட்டுமே

 வேறு ஏதாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அது உங்கள் இஷ்டம்.

 செய்முறை :

 கடலைப்பருப்பு உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும் இப்பொழுது நான் ஒரு ஆளுக்கான  அளவாக ஒரு 100 கிராம் கடலைப்பருப்பு எடுத்து ஊற வைத்தேன்.





 பிறகு இரண்டு மணி நேரம் ஆன பிறகு காய்ந்த மிளகாய் ஒன்று கொஞ்சம் உப்பு பெருங்காயம் இஞ்சி இவற்றைச்  சேர்த்து தண்ணீர் கொஞ்சம் கூட இல்லாமல் அரைக்க வேண்டும் .

அரைத்த பின் அந்தக்  கலவையை சிறிய டம்ளர்களில் இதுபோன்று கொஞ்சம் எண்ணெய் தடவி ஊற்றி வைக்கவும்.


ஊற்றி நீராவியில் வேக வைக்கவும் .வெந்த பிறகு சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு ஒரு ட்டில் கொட்டிக் கவிழ்த்தால்  இதுபோன்று தொட்டி வடிவில் உங்களுக்கு ஒரு ஸ்நாக் கிடைக்கும் .பிறகு அதில் நடுவே டூத் பிக் கொண்டு சிறிய துவாரம் செய்யவும் .

அந்த துவாரத்தில் கொத்தமல்லி தழை எடுத்து செருகி வைக்கவும் ரெடியாகிவிட்டது. நமது   Bonzaai     ஸ்நாக்ஸ்.





எப்படி இருக்கிறது எனது ஐடியா

 

Wednesday 7 July 2021

தனபாட்டா நாள் July 7 th

 தனபாட்டா  நாள்

 ஜப்பானில்  இன்று   பல மக்கள் மூங்கில் மரத்தில்  தங்கள் விருப்பங்களை    காகிதத் துண்டு களில் தொங்கவிடுகிறார்கள்

.இந்த “நட்சத்திர விழா”  ( Star Festival )ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? ஜப்பானிய மக்கள் ஏன் வண்ணமயமான காகிதத் துண்டுகளில் தங்கள் விருப்பங்களை எழுதுகிறார்கள்? 

தனபாட்டாவின்    கதை படியுங்கள் புரியும் .  

தனபாடாவின் கதையின் வரும் முக்கிய கதாபாத்திரம் இளவரசி ஓரிஹைம். அவளது காதலன் ஹிகோபோஷி,.

பால் வெளி (Milky way) என்று அழைக்கப்படும் தெய்வீக நதியில்  துணிகளைத் தயாரிக்கும் அழகிய நெசவாளிப் பெண் ஓரிஹைம் .

எப்பப் பாரு துணிகள் நெய்வதிலேயே அவள் ஈடுபட்டதால் அவளுக்குள் ஒரு சொல்ல முடியாத சோகம் .இப்படியே போய்கிட்டு இருந்தால் ..... ?

யாராவது நாம மேலே அன்பாக இருக்கமாட்டாங்களான்னு ஏங்கிகிட்டு இருந்தாள். 

அவங்க அப்பாதான் சொர்க்கத்தின் கடவுள் .

ரொம்ப வெயிட்டான பார்ட்டிதான் ஆனாலும் கஷ்டப்படணும்ன்னு எழுதியிருக்கு போல . 

பால்வெளிக்கு(Milky way)அந்தண்டைப்பக்கம்  ஒரு நல்ல சின்ன வயசுப் பையனைஅவருக்குத் தெரியும்..அவன் பேருதான்  ஹிகோபோஷி, அவன்  மாடு ஒட்டிக்கிட்டு இருக்கிறவன் .

நான் ஒண்ணு நோட் பண்ணியிருக்கேன்  

 பழைய காலக் கதைகளில் எல்லாம் மாடு  ஓட்டறவங்களுக்கு நல்ல இடத்துலே  அழகான பொண்ணு கிடைச்சு இருக்கு . 

முதல் பார்வையிலேயே  லவ்வு கிளிக் ஆயிடுச்சு .

லவ்  பண்ணிகிட்டே இருந்தாங்க . லவ்வுன்னா லவ்வு அப்படி ஒரு லவ்வு

இந்தப் பொண்ணு துணி நெய்வதையே நிறுத்திடுச்சு  அவன் மாடு ஓட்டறதை நிறுத்திட்டான் . 

மாடெல்லாம் வானத்தில், அதும் பாட்டுக்கு இஷ்டத்துக்கு சுத்தி கிட்டு இருந்துச்சாம் 

உடனே கடவுள் ரொம்ப  கோபம் ஆகிட்டு, இரண்டு காதலர்களும் ஒன்றாக  இருக்கறதுக்கு “தடா” ன்னு சொல்லிட்டாராம்   

பொண்ணு சொல்லிச்சாம் “நானில்லாமல் அவனில்லை அவனில்லாமல் நானில்லை ல லா லல்லா லா “ன்னு 

என்ன இருந்தாலும் அவர் ஓரிஹைமின்  அப்பா இல்லையா ? 

 பொண்ணு மேலயும் பாசம் ஜாஸ்தி . பொண்ணு கண் கலங்கினால் அவருக்குத் தாங்குமா  ?  சரின்னு  ஒரு கண்டிஷன்  போட்டார் .

அதாவது  ஓரிஹைம் தனது நெசவுக்குத்  திரும்பினால் அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை சந்திக்கலாம் அப்படீன்னு .

ஓவராத்தான் இருக்கு இல்ல ?

அந்த வருஷத்துக்கு ஒரு நாள் என்பது ஜூலை  மாதம் ஏழாம் நாள் . அதாவது சுலபமாக ஞாபகம் வச்சிக்கிற  மாதிரி சொல்லியிருக்கிறார் .

சரின்னு ரெண்டும் ஒத்துக்கிச்சுங்களாம் .

 அப்பா கொஞ்சம் வில்லங்கம் புடிச்ச அப்பா போலெ .

கட்டக் கடைசியா அந்த நாள்  அதாவது , நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நாள் வந்தது, 




ஆனால் பால் வெளியைக் (Milky way)  கடப்பது என்பது அவர்கள்  ரெண்டு பேருக்குமே ரொம்பக் கஷ்டமாக இருந்துச்சாம்   . அப்ப அங்கே இருந்த   magpai  பறவைக் கூட்டம் ஓரிஹைமின் சோகத்தைக் கண்டு ஐயோ பாவம்ன்னு இரக்கப் பட்டு நம்ப குரங்கு அணிலெல்லாம் ராமருக்குப் பாலம் கட்டிக் கொடுத்த மாதிரி  பாலம் கட்டிக்கொடுத்திடுச்சுங்களாம் .

அதனால்  அவங்க ரெண்டு பேரும் மறுபடியும்  ஒண்ணா வருஷத்தில் ஒரு தடவை சந்திச்சுக்கிட்டு இருக்காங்களாம் 

தனபாட்டா நாளில் மழை பெய்யும்போது, பறவைக் கூட்டம் வராது என்றும், அப்படி மழை பெய்தால் காதலர்கள் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்றும்  கூறுகிறார்கள்.

தனபாட்டா நாளில் மழை பெய்தால்  இந்த  மழையை "ஓரிஹைம் மற்றும் ஹிகோபொஷியின் கண்ணீர்" என்று சொல்கிறார்கள்

அது சரி  தனபாட்டா விருப்பத்தை எப்படி implement செய்வது?

ஒரு அட்டையை உருவாக்கி உங்கள் விருப்பத்தை எழுதுங்கள்

உங்களுக்குத் தேவை. வண்ணக் காகிதம் (ஓரிகமி காகிதம் அல்லது வண்ணக்காகிதம்) 

உங்கள் அட்டையை உருவாக்க காகிதத்தை கார்டு வடிவில்  வெட்டுங்கள். 

நூல் காட்டித் தொங்க விட ஒரு துளை செய்யுங்கள் ..

உங்கள் விருப்பத்தை எழுதுங்கள். 

நூலை  இணைக்கவும். .

இது எல்லா வயதினரும்செய்யலாம் 

 ஒரு விருப்பத்தை நினைத்து , வண்ணமயமான காகிதங்களில் (டான்சாகு) எழுதி, அவற்றை ஒரு மூங்கில் மரத்தில் கட்டுங்கள்.



 இந்த மரம் ஒரு  கோயில் சன்னதியில் இருக்கலாம் அல்லது 

உங்கள்  தோட்டத்தில் உள்ள மரத்தில் கூடக் கட்டி வைக்கலாம்  .

உங்கள் எல்லோருக்கும் தனபாட்டா  நாளின் வாழ்த்துக்கள் 

உங்கள் ஆசைகள் நிறைவேறினால் எல்லாப்  பெருமையும் தனபாட்டா விற்கே

Sunday 4 July 2021

காலை எழுந்தவுடன் வாத்து பட்டாம்பூச்சி முயல்

 மார்க் ட்வைன் ஒருமுறை கூறினார்  “ஒரு தவளை சாப்பிடுவது உங்கள் வேலை என்றால், காலையில் அதை முதலில் செய்வது நல்லது. இரண்டு தவளைகளைச்  சாப்பிடுவது உங்கள் வேலை என்றால், முதலில் மிகப்பெரியதை சாப்பிடுவது நல்லது. ” என்று 

... தவளையை சாப்பிடுவது என்பது  நமது வேலையைச் செய்வதாகும், இல்லையெனில் தவளை உங்களைச் சாப்பிட்டுவிடும் , அதாவது நீங்கள் நாள் முழுவதும் அதை ஒத்திவைப்பீர்கள்.

காலை எழுந்தவுடன் தவளையைச்   சாப்பிடுங்கள்  என்று சுயமுன்னேற்ற எழுத்தாளர் பிரையன் டிரேசி என்பவர் எழுதிய புத்தகம் மிகவும் பிரபலமான ஒன்று 

அதில் அவர் தவளை என்று குறிப்பிடுவது நாம் அன்றாடம் குளம் குட்டைகளில் காணும்  தவளை அல்ல  தவளை என்று   ஒரு சிம்பாலிக்காக சொல்லியிருக்கிறார் .அவ்வளவுதான் 

மார்க் ட்வைன்  சொன்னது போல  இவரும் தவளை என்று சொல்லுவது நாம் செய்ய வேண்டிய வேலைகளை .

காலை எழுந்தவுடன் நாம் அன்று செய்ய வேண்டிய வேலைகள் எதுவோ அதை முதலில் கட்டாயம் முடித்துவிட வேண்டும்   எப்படி என்றால் காலை எழுந்தவுடன் நாம் காலை உணவு உண்பது போல அதிலும் அவர் சொல்லுவது முதலில் பெரிய தவளையை சாப்பிடவேண்டும் என்கிறார்

 மிகக் கடினமான செய்யப் பிடிக்காத வேலைகளை முதலில்      செய்து விடவேண்டும் என்று சொல்கிறார்.

பிரையன் ட்ரேசியின் கூற்றுப்படி, “தவளைகளை உண்ணுதல்” என்பது தள்ளிப்போடுதலைக் கடப்பதற்கான ஒரு வேடிக்கையான வழியாகும்.

வேலைகளைத்  தள்ளிப் போடுவதை  நிறுத்துவதற்கும், குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்வதற்கும் 21 சிறந்த வழிகள்  என்ன என்பதை பற்றின புத்தகம்

இந்த புத்தகமானது நிறைய பிரதிகள் விற்பனையாகி இந்தப் புத்தகத்தால் நிறைய பேர் தங்களது லட்சியத்தை அடைந்திருக்கிறார்கள் .

எனக்கும் இதுபோன்ற சுய முன்னேற்ற நூல்கள் பலவற்றை படித்துப்   படித்து சில விஷயங்கள் மட்டுமே என்னால் பின்பற்ற முடிகிறது.

இந்த புத்தகத்தில் கூறியபடி என்னால்  தவளை எதையும் தேடி அலைய முடியவில்லை ஏனென்றால் நாம் நிறைய ஏரி  குளங்கள் எல்லாவற்றையுமே அழித்து விட்டு அதில் வீடுகளை கட்டி விட்டோம்

அப்படிப்பட்ட நாம் குளம் குட்டை மட்டும் சும்மாவா விட்டு வைப்போம் .

எனவே எனக்கு தவளை எங்கு தேடியும்  கிடைக்கவில்லை 

இருப்பினும் மனம் தளராமல் தவளைக்கு பதிலாக வேறு ஏதாவது ஒன்றை சாப்பிட்டு நாமும் நம் லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு ஆசை எனவே தவளைக்கு பதிலாக நான் வாத்து முயல் மற்றும் பட்டாம்பூச்சி இவைகளை சாப்பிடுவதற்காக இட்லியில் அதாவது இட்லி மாவில் நான் வாத்து தவளை முயல் பட்டாம்பூச்சி இவைகளை செய்து நான் சாப்பிட்டு சில லட்சியங்களை   அடைந்திருக்கிறேன் 😀

நான் சாப்பிட்ட வாத்து  முயல்  பட்டாம்பூச்சி எல்லாம் என் தட்டில் இருக்கிறது  நீங்களும் என்னைப் பின்பற்றி இதுபோல செய்தால்  உங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை நிச்சயமாக அடைய முடியும்.

பிரையன் ட்ரேசி சொன்னது இது .




 நான் செய்தது இது .