Saturday 30 March 2019

ஸ்மார்ட் பிளாக்



 உலகம் தாராள மயமாக்கப்பட்டதாலும்  தொழில் நுட்பம்     வெகு வேகமாக முன்னேறி வருவதாலும் இப்ப ஏகப்பட்ட சமாச்சாரங்கள் ஸ்மார்ட்  ஆகி விட்டன .
ஸ்மார்ட் போன்கள்
 நிறையப்பேரிடம் ஸ்மார்ட் போன்கள் .
தமிழிலோ அல்லது   இங்கிலீஷிலோ   நாலு வார்த்தை   சேர்ந்தா மாதிரி   எழுதத்       தெரியாதவர்களெல்லாம் கூட
தங்கள் எண்ணங்களை smilie மூலம் அல்லது பல ஃ பார்வேர்ட்  message  மூலம் எளிதில் வெளிப் படுத்தி  விட முடிகிறது .

 ஸ்மார்ட் போனைக் கொண்டு
ஏகப் பட்ட விஷயங்கள் செய்ய முடிவது எல்லோரும் அறிந்ததுதான் . அது தவிர ஏசி ஆன்  பண்ண முடிகிறது.
இன்ஃ பிரா  ரெட் சம்பந்தமுள்ள அனைத்து உபகரணங்களையும் 
ஸ்மார்ட் போனைக் கொண்டு  இயக்க முடிகிறது .

 ஸ்மார்ட் வாட்ச் 

இப்பொழுது வாக்கிங்  வருபவர்களின் பல பேர் கையில் ...
அவ்வப் போது பேச  வேறு செய்கிறது 
ஓடு...ஓடு ... என்கிறது.
நட.... நட என்கிறது.
இருந்தாலும்  ஒரு சிலர் மட்டுமே  அது  கத்திய  பின்பு  வேகமாக  நடக்கிறார்கள்
நிறையப் பேர் கண்டு  கொள்வதில்லை .,வழக்கம் போல்

ஸ்மார்ட் டி.வி 

இப்பொழுது   மெல்ல  மெல்ல இந்தியாவில் பிரபலமாகிக் கொண்டு வருகிறது .
ஸ்மார்ட் டி  வி இல்லாதவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும்  அபாயம் கூட வரலாம் .
சாதி இரண் டொழிய வேறில்லை சாற்றுங்கால்
ஸ்மார்ட் டி வி உள்ளோர் பெரியோர்
இல்லாதோர்  இழிகுலத்தோர்        நிலைமை வரலாம்.
ஸ்மார்ட் தண்ணி பாட்டில்
ஸ்மார்ட் தண்ணி பாட்டில் கூட இருக்கிறது
நமக்குத் தேவைப்படும்  நீர் அளவு தெரிந்து அது நம் உடலுக்குத் தண்ணீர் தேவைப்படும் போது நமக்கு நினைவூட்டும்  
.
 ஸ்மார்ட் பல்புகள் .

 இதில் காமெரா பொருத்தப் பட்டுள்ளது . இதில் பல ஆபத்துக்கள் உள்ள போதும் உபயோகம் பெருகி வருகிறது  

ஸ்மார்ட் குக்கர்

 , இது பற்றி நானும் மெம்பராக  இருக்கும்  வாட்சப் குரூப்பில் ஒரு பெண்மணி மிகவும் சிலாகித்துச் சொன்ன பல உபயோகங்களால் ஒரு இரண்டு பேர் புது அரிசி குக்கர் வாங்கி விட்டனர் .

இனி  வரும் காலங்களில்  வரதட்சிணை ஐட்டங்களில்  கூடிய விரைவில் முதலிடத்தைப்     பிடிப்பதற்கான    வாய்ப்பு   அதிகம் உள்ள   காட்ஜெட்  என்று நினைக்கிறேன் .
.
 இப்படி சகலமும் ஸ்மார்ட் ஆகிவிட்ட நிலையில் ரோட்டில் ஜனங்களை பார்க்கும்போது நிறையப்  பேர்  ஸ்மார்ட் ஆகிவிட்டது போன்ற 
ஒரு ஃ பீலிங்கு . 
நாம மட்டும் ஏன் பின்தங்கிய வகுப்பில்   ?
இதனால் மிகவும்  உணர்ச்சி வசப்பட்டு ஆப்பம் செய்துவிட்டு இது "ஸ்மார்ட் இட்லி " என்று பேர் வைத்து விட்டேன் . ஏனெனில் நடுவில் இட்லி மாதிரியும்  சுற்றிவர தோசையாகவும் இருப்பதால்....
ஏதோ என்னால் முடிந்த smartness 

அப்படியானால் ஏன் ஸ்மார்ட் பிளாக் இல்லை ?
யோசித்தேன் 
நாம் எண்ணங்களை அப்படியே டைப் செய்யும் ஒரு செயலி இருப்பதாக சொல்கிறார்கள் .
 அதை  பிளாக்கிற்கு யாரும் பயன்படுத்துபவர்கள்  இருக்கின்றார்களா என்று தெரியவில்லை .
 ஆனால்  பதிவர்களில் சிலர்  , உதாரணமாக திரு திண்டுக்கல் தனபாலன் , திரு தமிழ் வாசி பிரகாஷ் போன்றோர் ஹை டெக்  பதிவர்கள் .
இன்னும் பலர் கூட இருக்கலாம் .
  வேறு யாரவது "ஸ்மார்ட் பிளாக்" வைத்துள்ளார்களா என்று தெரியவில்லை .
பதிவர்  யாராவது தனது பிளாக்கை "ஸ்மார்ட் பிளாக் " ஆக மாற்றி வைத்திருந்தால் தெரியப்படுத்தவும்
 அது சரி  நீ ஏன் உன் பிளாக்கை ஸ்மார்ட் ஆக்க வில்லை என்று கேட்கிறீர்களா ?
 நானே சூப்பர்  ஸ்மார்ட்டாக இருக்கும் போது .........
 ( காசா பணமா…. யாரும் சொல்வதில்லை என்பதால் நானே
 சொல்லிக் கொண்டேன்  ஹி.....ஹி ....உண்மையில் அந்த அளவுக்கெல்லாம் எனக்கு )........)

Thursday 28 February 2019

பதிவர் சநதிப்பு



வகுப்புகள் +வீட்டு வேலைகள்:
 தவிர வீட்டுக்கு ஒரு புது நபர் வந்து மூன்று மாதம் ஆகிறது . இதனால் தான் வலைப்பக்கம் வர இயலவில்லை .
புது நபர் பேரன் .
வலை உலகில் இரு பிரபலமான பதிவர்களின் சந்திப்பு பற்றித்தான் இப்போது எழுதப் போகிறேன் . 
அந்த இரு வலைப் பதிவர்களும் ஒரே கல்லூரியில் படித்தவர்களாம்
இருவருமே திருச்சியில் வளர்ந்தவர்களாம் .
இருவருமே 40 வயதைக் கடந்தவர்கள்
இருவருமே உலக விஷயங்கள் நாட்டு நடப்புக்குகளில் ரொம்பவே அப்டேட்  ஆக இருப்பவர்கள் .
இருவருமே பல நாட்களாக சந்திக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தாலும்  எதோ காரணங்களால்   சந்திப்பு நிகழமுடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது .
 கடைசியாக இருவரும் புதன்கிழமை அன்று 27 .2 .2019  அன்று சந்தித்துக்  கொண்டனர் .
வயதிற்கேற்ப திருச்சி யில் படித்த காலத்தில் நடந்த வற்றை அசை போட்டு மகிழ்ந்தனர் .
கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை  .
 மணியும் எட்டுக்கு மேலே ஆகிவிட்டபடியால்  பேச்சை முடிக்க மனமின்றி முடித்து அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பிவிட்டனர்.

 ஹி..ஹி .. 
சந்தித்தவர்கள் நானும் பானுமதி தம்பட்டம் அவர்களும்தான்.
 பேரில் தான் தம்பட்டம் தவிர நிஜத்தில் எதிர் மறை .
 எதோ பல நாள் பழகியவரைப் போன்று மிக சகஜமாகப் பேசினார் . கன்னடம் பேசிக் கற்றுக்கொள்வதில் இருக்கும் ஆர்வம் ஓகே .அது normal 
ஆனாலும் கன்னடம் எழுதப் படிக்க அவருக்கு இருக்கும் ஆர்வம் எனக்கு ரொம்பவே inspiring ஆக    இருந்தது.
அதற்காக அவர் எடுக்கும் முயற்சி  பிரமிப்பாக இருந்தது
நான் நேரில் சந்தித்த கீதா ஒரு வகையில்   inspiring ஆக இருந்தார் என்றால் இவர் வேறு வகையில் .
 நெடு நாள் கழித்து திருச்சி சம்பவங்களை நினைவு கூர்ந்தது மன நிறைவாக இருந்தது