Thursday 17 October 2013

பெரிய மனிதர்களைத் தோற்கடிப்பவர்கள் நிஜமாகவே பெரிய மனிதர்களாக ஆகிவிடுகிறார்களா ?

 ரெண்டு நாளைக்கு முன்பு பஸ்ஸுக்கு காத்திருந்த போது  ரோடில் போய்க்கொண்டு இருந்த இரண்டு பேர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் .

அதில் ஒருவர் வீரபாண்டியக்கட்டபொம்மன் ஸ்டைலில்  வீர வசனம் பேசிக்கொண்டு இருந்தார். யாரை என்று சரிவரப் புரியவில்லை சமூகத்தில் பெரிய  அந்தஸ்த்தில் உள்ள   தனது கம்பெனி தலைவராக இருப்பார் போலும்  .ஒரு ஆளை "அவன் என்ன பெரிய  இவனா  இவனை தோக்கடிச்சு  இவனை சீனை வுட்டே ஓட வைக்கிறேன் பாரு ,காணாம போக வைக்கிறேன் பாரு !"    என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார் .
பக்கத்தில் இருந்த ஆளும் கூட  வாயாலே  பெட்ரோல் ஊத்தி ஊத்தி  நல்லாவே கொளுத்தி எரியவிட்டுக்கொண்டிருந்தார்.
 கடைசியா வீரபாண்டியக்கட்டபொம்மன் டயலாக் தன்  நண்பரிடமிருந்து விடை பெற்றுப் போகும்போது ஒரு கொலை வெறியோடு தான் போனார் .

ஏனென்று தெரியவில்லை இந்த பேச்சு என் மனதில் திரும்ப திரும்ப
 டி.வி  விளம்பரம் மாதிரி பல  ( சும்மா ஒரு பேச்சுக்குத்தான் " பல" ன்னு  போட்டேன் ,நான் ரொம்ப பிசி ஆளு ன்னெல்லாம் நினைச்சிடாதீங்க )வேலைகளுக்கு நடுவிலேயும்  என்ட்ரி குடுத்துக்கிட்டே இருந்தது.
 யோசிச்சுப் பாத்தேன்.
பெரிய மனிதர்களைத் தோற்கடிப்பவர்கள் நிஜமாகவே பெரிய மனிதர்களாக ஆகிவிடுகிறார்களா ?

 பெரிய மனுஷன்னு நான் நினைக்கிற மனிதர்களில் நெப்போலியன் பொனபார்ட்  பிரதானமானவர். அவரை வாட்டர்லூ  போரில் தோற்கடித்த டியூக்  ப் வெலிங்டனை   நினைவில் வைத்திருப்பவர்களை விடவும் நெப்போலியன்  போனபார்டை  நினைவில் வைத்திருப்பவர்களே அதிகம் .
நெப்போலியன் பொன்மொழிகள்  என்பதுபோல் டுயூக்  ப் வெலிங்டன் 
பொன்மொழிகள் உள்ளதா என்று தெரியவில்லை .
 பெருந்தலைவர்  காமராஜர்  பற்றி  இன்றளவும் பேசப்படுகிறது. ஆனால் அவரைத் தேர்தலில்  தோற்கடித்தவரைப் பற்றி யாருமே பேசுவதில்லை.

 இது போலவே வின்ஸ்டன் சர்ச்சிலை தோற்கடித்தவர் . திருமதி இந்திரா காந்தி .செல்வி ஜெயலலிதா இவர்களைத் தோற்கடித்தவர்களை எல்லாருமே  மறந்துவிட்டனர்.

எனவே ஒரு பெரிய மனிதரைத் தோற்கடிப்பதில் நேரம் செலவு செய்வதை விட   நமது தகுதியை வைத்து நாம் பெரிய ஆளாவது தான் முக்கியம் போலே .  
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

3 comments:

  1. உதாரணங்களுடன் சொன்ன விதம் அருமை... தொடர்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. A different view sensei,liked it!great people comeout from ashes like phoneix,thats why they are great,where as those who win over them,stop there,always speaking about one glory,personally,I can still recollect the name of the person who won over kamaraj,because I am from virudhunagar!

    ReplyDelete