Monday 13 January 2014

நானும் போனேன் புத்தகக் கண்காட்சி



சனிக்கிழமை அன்று நான்  சுமார் 3 மணி அளவில் புத்தகக் கண்காட்சிக்குப் போனேன்.

 போன வருஷத்தை விடவும் நிறைய புக் ஸ்டால்கள் இருந்தன.

நடந்து நடந்து காலெல்லாம் ஒரே வலி.
கிட்டத்தட்ட ஒரு மூணு மணி நேரம் இருந்தேன்.

 உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்க அங்கங்கே சேர் இருந்திருந்தால் நல்ல இருந்திருக்கும்.

 இல்லாட்டி என்ன நமக்கா வழி தெரியாது?

எங்கே காலியான சேர் இருக்கோ அங்கே அப்பப்போ உட்காந்து ரெஸ்ட் எடுத்துகிட்டேன்.

அக்யு  பங்க்சர் புத்தகம் ஒண்ணும் , ரியோ ஒகாவா வின் புத்தகங்கள் மூணும்  மற்ற சில குட்டி புத்தகங்கள் வாங்கினேன்.எல்லாம் சேர்ந்து ரூபாய் 890/- ஆச்சு.


தேசிக விநாயகம் பிள்ளையின் மருமக்கள்  மக்கள் வழி மான்மியம்  வாங்கலாமா என்று நினைத்தேன்.

பிறகு வாங்கலை .

  பதிவர்களில் திருமதி அகிலா அவர்களைப்
 பார்க்கலாம் என நினைத்து அவர்களுக்குப் போன் பண்ணினேன் .
ஆனால் போனை எடுக்கவில்லை   . வேறு  வேலையில் பிசியாக இருந்தார்களா என்ன தெரியவில்லை.

 மும்பையில் என்னுடன் வங்கியில் வேலை பார்த்த  தமிழ் நாட்டிலிருந்து சென்ற ஒரு நண்பரைப் பார்த்தேன்.

 அவர் தனது மகனுடன் வந்திருந்தார்.

சில பல பழைய விஷயங்களைப் பற்றியும் ,பழைய   colleague கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்
இதில் கடைகளைக் கலந்து கட்டி வைத்திருப்பதை விட   பரீட்சை சம்பந்தமான  எஸ். சந்த்  கடைகள் , குழந்தைகள் சம்பந்தமான புத்தகங்கள்  கடைகள் ஆன்மிகம் சம்பந்தமான கடைகள் என்று பிரித்து வைத்திருந்தால்
குழந்தைகள் புத்தகம் வாங்க குழந்தைகள் கடை என்று குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அலையவேண்டாமே!

குழந்தைகளை காணாமால் போக விட வேண்டாமே!

நான் இருந்த சமயம் அப்பா அம்மா வைத் தவறவிட்ட   இரண்டு குழந்தைகள் பற்றிய அறிவிப்பு வந்தது.
ஒரு குழந்தை மைக்கில் அழுது அம்மா அம்மா என்றது பாவமாக இருந்தது.

அது போல வயசானவர்களுக்கென உள்ள ஆன்மிகம் ,சமயம் சம்பந்தப் பட்ட கடைகளையும் தனியே ஒரு வரிசையில் வைத்திருந்திருக்கலாம்.ஒரு பாட்டி பாவம் கிரி டிரேடர்ஸ் எங்கே என்று அலைந்துகொண்டிருந்தது.அப்புறம்  என்கொயரியில் கேட்டு சொன்னேன்.

1979 ம் வருடத்திலிருந்தே புத்தகக் கண்காட்சி போய்க்கொண்டு இருக்கிறேன்.(வடக்கே இருந்த  வருடங்களைத் தவிர்த்து)

வடக்கே  வேறு  ஊர்களில் இப்படிப்பட்ட  பெரிய அளவிலான  கண்காட்சியை நான் பார்த்ததில்லை

அந்த விஷயத்தில் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சி  சூப்பர்.





2 comments:

  1. தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  2. நன்றி. தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete