Saturday 5 August 2017

எங்கே அந்த மிச்ச ஆறு பேர்


  திரு கில்லர்ஜீ அவர்களின் பதிவு  படித்த   பின்    நான்   வெட்டியாக   யோசித்து எழுதும் பதிவே  இது.

 அவர்    மாதிரியே   எல்லாரும்   அவங்கள மாதிரி   இருக்கறதா   சொல்லப்படற மிச்ச   ஆறு பேரைக்   கண்டு பிடிக்க    ஆரம்பிச்சுட்டாங்கன்னாக்க   என்ன  ஆகும் என்று     நினைச்சுப் பார்த்தேன் .

முதலில்    எல்லாரும்   இது பற்றி    பேஸ் புக்கில்  

" இது தான்   என் அழகிய தமிழ் முகம் . யாரெல்லாம் என்னை மாதிரி முகம் கொண்டவர்களாக இருக்கிறீங்க  வாங்க வாங்க  “workers of the  world unite என்று காரல் மார்க்ஸ்  சொன்ன மாதிரி  அறை   கூவல்    விடுவார்கள் .


பிறகு பேஸ் புக்கில்         சில வேலையத்த     குரூப்களில்    எல்லாம்     வித விதமான   கோணங்களில்   செல் பி யாக  நிரம்பி வழியும் .


அது    தவிர வாட் ஸ்   அப்பிலும்     இந்த ஜுரம்  வேகமாகப்   பரவிவிடும் .

அதுக்கப் புறம்   ரோட்டில்   போகும் போது  மக்களெல்லாம்  நம்ம முகம்   மாதிரி  இருக்கறவங்க   போறாங்களான்னு   ரோட்டையோ     போற    வர
வண்டியை யோ  பாக்காம  நடப்பாங்க .

மாலுக்குப்  போனாலும் சரி   மார்கெட்டுக்குப் போனாலும் சரி   சினிமாவுக்குப் போனாலும் சரி   ,வாக்கிங் போனாலும்   சரி  
எல்லாரும்   அடுத்தவங்க முகத்தையே   உற்றுப்    பாக்க   ஆரம்பிச்சுடுவாங்க ....
.அதனால் பல விளைவுகள் வரலாம் .
 காதல் வரலாம் ,
அடிதடி நடக்கலாம்  .
மற்றவை உங்கள் கற்பனைக்கு.

பிறகு   ஒவ்வொரு டி . வி  சானலில்   இது  பற்றிய  ஓசை  மிகு  விவாதங்கள்    நடக்கும்

முக்கியச்   செய்திகள்    பரபரப்புச்    செய்திகள்    பகுதியில்   இதை   ஓட விடுவார்கள் .

தமிழர்களும்    மற்ற முக்கிய   பிரச்னைகளைக்  கொஞ்ச நாளைக்கு   மறந்து விட்டு     இதிலேயே   மும்முரமாக இருப்பார்கள்

மற்ற சீரியல்கள் , ரியாலிட்டி       ஷோக்கள்   டி ஆர் பி ரேட்டில்  பின்னுக்குத் தள்ளப்படலாம் .

சீரியல்கள்   மற்றும்   சினிமாக்கள்    கதையே    தன்னை   மாதிரியே    இருக்கற   மிச்ச பேரைக் கண்டு பிடிக்கும் போது    நடக்கிற போது   நடக்கிற காமெடிவீரச் செயல்கள் , மனதை உருக்கும் அழுகைக்    காட்சிகள்மனத்தைத் தொடும் பாடல்கள் அதில்  பல  டிவிஸ்ட் கள்  கொண்டவையாக இருக்கும்.


பண்டிகை நாட்களில்    டி வி நிகழ்ச்சிகளில்    சினிமா  பிரபலங்கள்    மிச்ச ஆறு பேரைத் தேடியபோது  தமக்கு  நடந்த அனுபவங்களை    விவரிப்பார்கள்..


மக்களும் அவற்றை பண்டிகை எதற்காகக்  கொண்டாடுகிறோம்  என்பதையே  மறக்கும் அளவுக்கு ஆர்வத்துடன் பார்ப்பார்கள்.

முதலில் தன்னை மாதிரி உள்ள ஆறு பேரைக் கண்டு பிடித்தவர்களுக்குப் பரிசு கிடைக்கலாம் .

 அன்றைய தினப் பலனில் யார் யாருக்கெல்லாம் தன்னை மாதிரி உள்ள ஆறு பேரைக் கண்டு பிடிக்க முடியும் என்று ஒரு வாக்கியம் சேர்க்கப் படலாம் .
.
தவிர
இதற்காக வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் , செய்ய வேண்டிய பூஜைகள் ,எந்த எந்த ராசிக்காரர்கள் எந்தக்  கோயிலில் வழிபாடு செய்யவேண்டும் விவரங்கள் இந்த வார இதழில்.


 இத்யாதி ....... விஷயங்கள்  நடக்கலாம்.

16 comments:

  1. வணக்கம் எனது பதிவால் உருவான கற்பனைக்கு முதலில் வாழ்த்துகள் இதைப்போல மற்ற பதிவர்களும் இதை தொடரலாம் என்பது எமது கருத்து அதாவது இலவசமாக செலவில்லாமல் ‘’ஸூப்பர் க்ளு’’ கிடைக்கிறதே....

    அது சரி சாலையில் போகும் பொழுது அடுத்தவர்களின் முகத்தையே பார்த்துக் கொண்டு போனால் விபத்து நடக்காதா ?

    மேலும் ஏற்கனவே சண்டைக்காரன் வநது கொண்டு இருப்பான் அவனை உற்றுப் பார்த்தால் என்னாகும் மேலும் பிரச்சனை வருமே ?

    பரவாயில்லையே சேனல்களில் வருமளவுக்கு.... இதை இவ்வளவு நீளமாக யோசித்தமைக்கு ஒரு சபாஷ்

    ஒரேயொரு குறை எனது பெயரை கில்லர்ஜி என்று எழுதாமல் கில்லர்ஜீ என்று எழுதியதால் தெய்வகுற்றம் ஏற்பட்டு விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி.

    பயபக்தியுடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி .
      எழுத்துப் பிழைக்கு வருந்துகிறேன்.
      தெய்வத் குத்தத்திற்கு பரிகார பூஜை உள்ளது .செலவு சுமார் ரூ2௦௦௦௦௦/-மட்டுமே

      Delete
  2. ஐயோ...! இந்த விளையாட்டிற்கு வரலே...

    ReplyDelete
  3. ஹஹஹஹஹ் செம!!! அருணா! நல்ல கற்பனை!!

    கீதா

    ReplyDelete
  4. அது சரி நீங்க கூடத் தேடத் தொங்கிட்டீங்களாமே!! நியூஸ் சேனல்ல வந்துருச்சு!! நீயா நானா வில் கூடத் தலைப்பே அதுதானாம்!!! இது நீயா நானா என்று!!! அதுல சில கணவன் மார்களும், மனைவிமார்களுக்கும் கூட சந்தேகம் வந்துவிட்டதாமே!!! ஜீன் ஐடென்டிக்குப் போயிருக்காம்! ஹிஹிஹிஹி...

    இப்படி நீயா நானாவைக் கிடண்டலடித்து கொஞ்சம் எழுதி வைத்திருக்கேன் பதிவு! எழுதி ஒரு ஒன்னரை வருஷம் இருக்கும்...முடிக்காம அப்படியே இருக்கு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. முடித்து விரைவில் பதிவிடுங்கள்.

      Delete
  5. வருகைக்கு நன்றி . நீங்கள் தொடருங்களேன்

    ReplyDelete
  6. சுவாரஸ்யமான கற்பனை.

    ReplyDelete
  7. கற்பனைக்கு எல்லையில்லை.

    ReplyDelete
  8. கற்பனைச் சிறகு என்று சும்மாவா சொன்னார்கள். அருமை போங்கள். இங்கே கனடாவில் என்னைப்போல் ஒருவரைக் கண்டால் உடனே சொல்கிறேன்.

    ReplyDelete