Sunday 15 January 2017

வட்ட அப்பம்


 ஒரு   புத்தகத்தைப்   படித்து   முடித்த    பின்னர்தான்   பதிவுப் பக்கம் 

வரவேண்டும்    என்று   எனக்கு நானே  தீர்மானம் 

   நிறைவேற்றிக்கொண்டதால்    பிளாக்    பக்கம்   வரவே இல்லை

அது ஒரு ஜப்பானிய பாடப் புத்தகம் .

மற்றபடி    செய்தித்தாள் கூட   ஒதுக்கப் பட்டது

டிவியும் தடா போட்டுக் கொண்டேன் .

முடிச்சாச்சு .

அதனால் தான்   மற்றவர்கள்   பிளாக்கிற்கு    காமெண்ட் கூடப் போடவில்லை 

. கொஞ்சம்     இந்தப்    பக்கம்   வந்தால் கவனம்    சிதறி விடுகிறது.

  இந்த    வட்ட அப்பம்   திரு ஸ்ரீராம்   அவர்களால்(தித்திப்பு தோசை

இன்ஸ்பயர்   செய்யப்பட்டு   செய்து   பார்த்த   ஒரு   பலகாரம் .

இது குழிப்பணியார மாவேதான் .
பச்சரிசி 100  கிராம்
புழுங்கரிசி 100  கிராம்
வெந்தயம் ஒரு சின்ன ஸ்பூன்
உளுந்து 50  கிராம்

 என்னிடம் தராசு உள்ளது

மற்றவர்கள் பச்சரிசி 4 :புழுங்கரிசி 4 :உளுந்து 1

என்கிற விகிதத்தில் ப் போடவும் .

 பிறகு   ஒரு    நான்கு    மணி    நேரம் கழித்து அரைத்து   எடுத்து   


சிறிதளவே   ஆப்ப சோடா ,   உப்பு     எல்லாம்    போட்டுக்    

கலக்கி    வைக்கவும்

ஒரு     நான்கு     அல்லது    ஆறு    மணி    நேரத்திற்குப்    பிறகு 

 இந்தக் கலவையுடன்  வடித்த    வெல்லப் பாகைக்  கலக்கவும் .

 முடிந்தால்   வாழைப்பழமும்   சேர்க்கலாம் .   

நான் சேர்க்கவில்லை.

ஏலக்காய்  தூள் பண்ணிப் போடவும் .

 பிறகு    இந்த மாவை க்  குக்கர்  பாத்திரத்தில்   நெய்  தடவியபின்  

 ஊற்றி  இட்லி    வேகவைக்கிற   மாதிரி   வேக வைக்கணும் .


வெந்து    ஆறிய   பின்    ஒரு சின்ன     வட்ட   வடிவ   எவர்சில்வர்    டப்பா   

 கொண்டு    வட்ட வட்ட மாக வெட்டி எடுத்தல்  வட்ட அப்பம்   ரெடி .

இது ரொம்பவே  ஈஸி..

,ஏனெனில்

1 .'ஆவியில் வேகிறது. ,நான் டயமர் வைத்துவிட்டேன் . நிற்க வேண்டிய அவசியமில்லை .
ஆனால்     குழிப் பணியாரத்திற்கு நின்றுகொண்டு  செய்யவேண்டும் .


2 . மாவு நீர்த்துப் போச்சோ கெட்டியா இருக்கோ  கவலையே வேண்டாம் .
எந்தப் பதமாக இருந்தாலும் வெந்துக்கும் .

3.நமக்குத் பிடித்தமான வடிவங்களில் கூக்கி கட்டர் கொண்டு கூட வெட்டலாம் .

4 . எண்ணைக் கொழுப்பு தவிர்க்கலாம்

9 comments:

  1. எங்கள் வீட்டில் பொதுவாகப் புதியதாய் எதுவும் முயற்சி செய்வதில்லை எப்போதேனும் அதுவும் கேரளத்தைத் தவிர பிற மாநிலப் பதார்த்தங்கள் செய்வதில்லை.....

    கீதா: யெஸ் அருணா...இந்த மாவை நான் ஒரு முறை வெல்லம் சேர்த்தபின் ஏதோ தவறுதலாக கொஞ்சம் நீர்த்துப் போக பணியாரமாகக் குழிக்கல்லில் போட்டு செய்ய முடியாமல் தோசைக்கல்லில் போட்டு மூடி வைத்து இப்படித்தான் செய்தேன். ஆனால் சுற்றி கொஞ்சம் எண்ணை விட்டுக் கொண்டேன். பழம் சேர்த்து அப்பமாகப் பொரித்தும் தோசை போன்றும் செய்ததுண்டு. கோதுமை மாவிலும் கூட பழம் சேர்த்து வெல்லம் சேர்த்து, கொஞ்சம் தேங்காய் விருப்பப்பட்ட்டப் சேர்த்து அப்பத்து மாவையே இப்படிக் கொஞ்சம் கனமாகச் செய்தால் அதுவும் நன்றாக இருக்கிறது.

    உங்கள் மெத்தடையும் செய்து பார்த்துவிடுகிறேன்..நன்றாக இருக்கிறது. எண்ணை இல்லாமல்... என்ன எனக்குப் பிடித்தாலும் சாப்பிட முடியாது ஒரு விள்ளல் அவ்வளவுதான்...

    நன்றி புதியதாய் ஒரு மெத்தடுடன் ரெசிப்பி...

    ReplyDelete
  2. ஜப்பான் புத்தகத்தைப்பற்றி எழுதலாமே....

    ReplyDelete
  3. அருமை
    ஜப்பானியப் புத்தகத்தைப் பற்றியும் எழுதலாமே

    ReplyDelete
  4. அது என்ன புத்தகம்?
    தித்திப்பு தோசை நெல்லைத் தமிழன் ரெஸிப்பி! வாழைப்பழம் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

    ReplyDelete
  5. எங்கள் ப்ளாக்குக்கு உங்களிடமிருந்து(ம்) ஒரு கதை எதிர்பார்க்கிறேன். மெயில் முகவரி :: sri.esi89@gmail.com.

    ReplyDelete
  6. நல்ல குறிப்பு. செய்து பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  7. செய்துபார்க்கிறேன். வெல்ல அளவு போடவில்லை. கொஞ்சம் குறைவாகப் போட்டால் போதும் என்று நினைக்கிறேன். இதுலேயே (வெல்லம் போடாமல்), கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கருவேப்பிலை தாளித்துப்போட்டால், உப்பு வட்ட அப்பம் சிறப்பா இருக்குமோ.

    ReplyDelete