Monday, 30 November 2015

பேரிடர்களும் பிரச்னைகளும்


   இயற்கையால்  மற்றும் மனிதனால்  வரும் பேரிடர்கள்  செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் காட்டும் போது , ஒவ்வொருவரும் தான் எப்படியெல்லாம் துன்பத்திற்கு ஆளானோம் என்று கூறுபவை எல்லாம் முடிந்தவரை உணர்வுகளத் தட்டி எழுப்பும் வகையில்தான் இருக்கின்றன. இது போன்ற ஒரு கால கட்டத்தை நானும் கடந்து வந்த ஞாபகம் எனக்கும் வந்தது.


 ஹைதராபாத்தில் நாங்கள் இருந்த போது எதோ ஒரு கலவரம் .அதனால் கிட்டத்தட்ட ஒரு  மாதம் வரை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது.அடிக்கடி கர்ஃ பியு வேறே .கடைகள் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப் பட்டிருக்கும் 144 உத்தரவு வேறு ,எனவே எங்கும் வெளியே செல்ல முடியாது .  பயங்கர கலவரம் ஸ்கூட்டரில்  பில்லியன் ஆகக் குழந்தைகள் கூடச் செல்லக் கூடாது.
 அப்பார்ட்மெண்ட் பெரியது என்பதால் அவ்வளவாகப் பிரச்னை இல்லை ,என்றாலும்  குழந்தைகள் வேறு முறையே 5 வயது 3 மூன்று வயது  என்பதால் வெளியில் கடைக்குப் போக ஆசைப் படுவார்கள் .


கர்ஃ பியு  உத்தரவு தளர்த்தும் சமயத்தில் மறக்காமல் வெளியே என்னுடன் கூட்டிச் செல்வேன்.அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டார்கள் ,ஏனெனில்  கடைகளில் வரிசையில் நின்று சாமான்கள் வாங்குவதால் அவர்களுக்கே புரிந்து விட்டது.

அதைவிடப் பெரிய பிரச்சினை என்னவென்றால் பொருட்கள் எல்லாருக்கும் மளிகைக் கடைகளில் குறிப்பிட்ட அளவே தருவார்கள் . எனது இரு மகன்களுமே சப்பாத்திமட்டுமே  சாப்பிடுவார்கள் ,அரிசி சோறு  சுத்தமாக சாப்பிட மாட்டார்கள் . எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களால் சாப்பிட வைக்க முடியவில்லை . டாக்டர்களும்  குழந்தை எது சாப்பிடுகிறதோ அதை கொடுக்க வேண்டுமே தவிர உங்கள்  எண்ணங்களை அதன் மீது திணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள் .

அதுவும் அப்பொழுதுதான் இருவருக்கும் மஞ்சள் காமாலை வந்து சரியாகி வரும் நேரம் ,பசி இருவருக்கும் எக்கச்சக்கமாக எடுக்கும்.இப்போது போல  கோதுமை மாவு ரெடி மேடாக அப்போது கிடைக்காது .ஒரு கடையில் மட்டும் மாவாக விற்பான் ,அந்தக் கடையில் ஒரு ஆளுக்கு ஒரு கிலோ மட்டுமே.

எங்களது அப்பார்ட்மெண்ட் வாசி ஒரு வயதான தம்பதிகள் ,
அவர்கள் என் கணவரின் ஆபீசில் வேலை பார்ப்பவர் ,ரிட்டயராக ஒரு  வருடம் இருக்கும் தருவாயில்  சென்னையிலிருந்து ஹைதராபாத் மாற்றப்பட்டார் . நாங்கள் தான் வீடு பார்த்தது முதல் பல உதவிகள் செய்தோம். பிறகு அந்த அம்மாவிடம் குழந்தைகளுக்காக வெட்கத்தை விட்டு அந்த ஒரு கிலோ கோதுமை மாவைக் கேட்டு வாங்கி .....அந்த ஒரு மாதம் நாங்களோ வீட்டில் குழந்தைகளைப் பார்த்துகொண்ட பெண்மணியோ ஒரு துண்டு சப்பாத்தி கூட வாயில் போட்டதில்லை . உப்பு கம்மியாக என்று சொன்னதால் பிரச்னை இல்லை.
 பசங்களுக்கு பிடித்த வாழைப் பழம் மற்றும் சீத்தாப் பழம் கறிகாய்கள் சூப்பு சீப்பு எண்ணெய் இத்யாதிகள் ...... இவைகளை வாங்க ,அது இது என ஒரு மணி நேரத்திற்குள் ஷாப்பிங் முடித்து விட்டுப் பின்னரே மூச்சு விட முடியும்.
 இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது .

 டிஸ்கி :
 தொடர்ந்து மொழிபெயர்ப்பு வேலை இருந்ததால்  மற்றவர்களின் பிலாக்குகளையும் படிக்கவோ காமெண்ட் போடவோ முடியவில்லை .

Tuesday, 3 November 2015

சர்ச்சைகள்


 மனிதனின் பிரதான குணங்களில் ஒன்று எதை எடுத்தாலும் அல்லது யார் எது சொன்னாலும் அதை முழுவதும் கேட்காமலேயே உடனே ஒரு மாற்றுக் கருத்து ஒன்று சொல்வது . விமரிசனங்கள்/ மறுத்துப் பேசுதல்  =அறிவுடைமை என்ற ஒரு எண்ணம் நம் எல்லோருக்கும் இருக்கிறது..
இதே போல் leggings விஷயத்திலும் இப்படித்தான் ஒரு நாலு அல்லது ஐந்து வருடமாக அணிந்து வரப்படும் உடையைப் பற்றி அந்த டயத்தில் பேச வேறு ஹாட் டாபிக் இல்லததனாலேயோ என்னவோ தெரியாது , கார சாரமாக விவாதிக்கப்பட்டது  அப்புறம் அடுத்த டாபிக் வந்ததும் லெக்கிங்க்ஸ் மறக்கப் பட்டுவிட்டது.



இங்கே மேட்டர் இப்படி ஓடிகிட்டு இருக்கும் போது பூனைக்குக்  கிமோனோ உடை ( ஜப்பானிய பாரம்பரிய உடை )அணிவித்து மகிழும் மக்களும் இருக்கிறாகள் .

 இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் யாரும் இது பற்றி விவாதிக்கவில்லை..
 யாரும் பூனைக்கு எதிராகப் போராட்டம் நடத்தவில்லை .
 பூனை மனிதரின் உடையை எப்படி அணியலாம் அன்று ஒட்டி வெட்டி தொலைக் காட்சியில் விவாதம் நடத்தப் படவில்லை 
ஹாய்....  சுகோயி  ( சூப்பர்  )என்று காண கச்சிதமாக மேட்டர் முடிக்கப் பட்டது

Saturday, 24 October 2015

ஜப்பானிய சரஸ்வதிதேவி

  
கிட்டத்தட்ட எல்லா நாட்டுப் புராணக்கதைகளிலும் கல்வி மற்றும் அறிவுக்கென்று தனிக் கடவுள்கள் உள்ளனர் .ஹிந்து மதத்தில் எப்படி சரஸ்வதிதேவியை வணங்குகிறார்களோ அது போலவே ஜப்பானிலும் BENZAITEN என்ற கடவுளை மக்கள் வணங்குகிறார்கள் .இவர் ஷிண்டோ புத்தமதக் கடவுளாக வணங்கப் படுகிறார்.இவர் முக்கிய 7 அதிருஷ்ட கடவுள்களில் ஒருவராகவும் கருதப் படுகிறார்.
இந்த தெய்வமும் அடுக்குத் தாமரையில் அமர்ந்திருக்கிறார்.. சரஸ்வதிதேவி கையில் வீணையோடு இருப்பது போலவே   BENZAITEN தேவியும் கையில் பிவா ( BIWA)  அல்லது ஜப்பானிய மாண்டலின் போன்ற இசைக் கருவி  கிட்டத்தட்ட வீணை போன்ற (வடிவில் மாறுபட்ட)இசைக் கருவியை கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
இவரை வழிபட்டால் அறிவு ,வாக்கு வன்மை ,இசை,மொழி  மற்றும் பல கலைகளில் வல்லவராக முடியும் என்று நம்பப்படுகிறது.சில இடங்களில் மழை மற்றும் விவசாய வளத்திற்காகவும் இவரை வணங்குகிறார்கள் .
இவருடைய  உதவியாளர்களாக டிராகன் களும் பாம்புகளும் மட்டுமே ( முக்கியமாக வெள்ளை நிறம் கொண்ட )

ரிக் வேதத்தில் விரித்திரன் என்கிற பாம்பு வடிவ அசுரனை சரஸ்வதி அழித்ததாகக் கூறப்பட்டுள்ளது., ஜப்பானில் BENZAITEN தேவியும் பாம்புகள் மற்றும் டிராகன்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படுகிறார் இங்கே BENZAITEN தேவிக்கான முக்கிய கோயில், டோக்கியோ நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் எனோஷிமா தீவில் உள்ளது
 File:Benzaiten.jpg





இந்தக் கடவுளின் கோயில்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஆறு அல்லது ஆறு சார்ந்த இடங்களில் உள்ளது .இவர்  FLOW " பணஓட்டம் " அதாவது பணப் புழக்கம் இவரை வணங்கினால் வளமுறும் என்று நம்பப்படுகிறது.
காமகுரா பகுதியில் உள்ள கோயிலில் மக்கள் தங்களின் பணப் புழக்கம் அதிகரிக்க  நாணயங்கள் அதாவது காசை  அந்த கோயிலில் உள்ள புனித நீரில்  கழுவுகிறார்கள்.பணம் இரட்டிப்பாக ஆகும் என்று நம்புகிறார்கள் 
 (ஒரு சிறிய தொட்டி மாதிரி உள்ள நீர் நிலையில் காசு கழுவப்படுகிறது  இது  ZENI ARAI என்று கூறப் படுகிறது ZENIஎன்றால் காசு  ;ARAI என்றால் கழுவுவது என்று பொருள்)

 கடலோரமாக உள்ள தீவுகளில் இந்தBENZAITEN  தெய்வம் குழந்தைகளைக் காக்கும் தெய்வமாகப் பெரிதும் வணங்கப் படுகிறார்.
 இவரைத் தகுந்த துணையோடு சேர்த்து வைக்கும் தேவி எனவும் வணங்குபவர் பலர்.
ஒரு சுவாரசியமான கதை ஒன்று உண்டு .
ஹனாகக்கி பஷு என்று ஒரு இளைஞன் இருந்தான் .
அவன் ஒரு BENZAITENகோயிலின் திருவிழா விற்குப் போயிருந்த போது தண்ணீர் குடிக்க நீர் ஊற்று எதுவும் இருக்குமா என்று தேடிப்போனால் நீர் ஊற்று எதுவும் இல்லை அதற்குப் பதிலாக ஒரு சுனை மட்டுமே இருந்தது .அங்கே ஒரு காகிதம் அவன் காலடியில் காற்றில் இருந்து பறந்து வந்தது . என்னவென்று பார்த்தால் அதில் ஒரு பெண்ணால் கையெழுத்து போடப்பட்ட கவிதை எழுதப் பட்டிருந்தது .கவிதை அவனை வெகுவாகக் கவர ,அதை  எழுதிய பெண்ணையே மணந்துகொள்ள வேண்டும் என்பதில்  வெகு தீவிரமாக ஆகிவிட்டான்.
கலைக்கடவுளை தன்னை அவளுடன் சேர்த்து வைக்குமாறு வணங்கினான்..ஏழு நாட்கள் கோயிலில் இரவு பகல் என்றெல்லாம் பாராது தவமிருந்தான்.பிறகு ஏழாம் நாள் முடிவில் அவனுக்கு ஒரு கோயில் சார்ந்த பெரியவர் வந்து  “:உம் பக்தியை வெகுவாக மெச்சினோம் பாதி முகம் மட்டுமே காட்டிய பெண்ணை அவனுக்குக் காட்டி  .நீ நினைத்த பெண்ணை அடைவாய் என்று கூறி விட்டு மறைந்தார் .பிறகு வெளியில் வந்தால் அந்தப் பெண்ணே அங்கு நிற்க அவளைக் கண்டு மறுபடியும் மயங்கி அவளிடம் கடவுளே உன்னை என்னிடம் சேர்த்து வைத்தார் என்று முழு விவரமும் சொல்ல அவளும் ஒகே சொல்ல அவளின் குலம் கோத்திரம் எதுவும் விசாரிக்காமல்( கடவுளே நேரில் வந்து சேர்த்து  வைத்த காரணத்தால் ) அவளை மணந்து குடித்தனம் நடத்தினான் .ஆனால் அவள் அவன் கண்ணுக்கு மட்டுமே தெரியப் பட்டவளாக இருந்தாள். இது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரு நாள் பக்கத்து ஊருக்கு  வேலை விஷயமாக சென்றபோது ஒரு வீட்டின் வேலைக்காரன் தன் எஜமானன் அழைப்பதாகச் சொல்ல இவன் போனான் .கடவுளின் அறிவுரைப் படி தான் நான் உன்னை அழைத்தது .என்று சொன்னான் .தன் மகள் தனக்கு நல்ல துணை வேண்டி BENZAITEN தேவி யிடம்  இறைஞ்சி 
 க்யோதொவில் உள்ள கோயில்களில் தான் எழுதிய கவிதையை அனுப்பியதாகவும் சொன்னான்.பிறகு கடவுள் உனக்கான துணை கிடைத்துவிட்டது என்றும் கடவுள் தன்னிடம் தன் மகளுக்கான மணமகனின் அங்க அடையாளங்கள் பற்றிச் சொன்னதாகவும் கடவுள் சொன்ன மாதிரியே  அவனின் அங்க அடையாளங்கள்  இருந்தது என்றும் அந்தப் பெண்ணின் அப்பா சொல்ல இவன் " இல்லை இல்லை எனக்கு ஏற்கனவே மணமாகிவிட்டது என்று சொல்லி முடிக்கு முன்னரே அந்த அப்பா தன் மகளைக் கூட்டி வந்து காண்பித்தால் என்ன ஆச்சரியம் !இவன் மனைவியே தான் அது.

அதாவது இத்தனை நாளும் அவளின் ஆத்மாவுடன் இவன் வாழ்கை நடத்திக் கொண்டிருந்திருக்கிறான். அதனால் தான் அவளை மற்றவர்கள் பார்க்க முடியவில்லை என்று புரிந்து கொண்டான் . பிறகென்ன ஜப்பானிய டும் டும் ...ஜாம் ஜாம் ...வாழ்க்கை 

Thursday, 22 October 2015

ரோட்டா வீசு வதும் கைப்பழக்கம்



ஓவையார்  21 ம் நூற்றாண்டில் பிறந்திருந்தால் இப்படித்தான் பாடியிருப்பாரோ என்று தோன்றுகிறது 

Wednesday, 21 October 2015

வேஷ்டிக்கும் வாழ்வு வரும்


 லெகிங்க்ஸ் பற்றி யார் கொளுத்திப்போட்டது என்று தெரியாது ஆனால் கொஞ்ச நாளைக்கு அந்த டாபிக்கை வைத்து நிறைய  ட்விட்ட ர்கள்  பதிவுகள் டி.வியில் பேச்சு என்றெல்லாம் வந்தன .
லெகிங்க்ஸ் பற்றி   மாஞ்சு மாஞ்சு கவலைப்பட்ட  இந்தத் தமிழ்  கூறும் நல்லுலகம்   வேஷ்டியை மறந்தது ஏனோ?

.அது ஏனென்று தெரியவில்லை பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களெல்லாம்  விளம்பரம் அவ்வளவாகத் தேவைப்படாமலே விவாதிக்கப் படுகின்றன.
ஆண்கள் சம்பந்தப்பட்ட உடை ஹேர் ஸ்டைல்  போன்ற  விஷயங்களெல்லாம்  விளம்பரம் கொடுத்தாலும் அவ்வளவாக   விவாதிக்கப்   படுவதில்லை .

மக்கள் திலகம்  எம்ஜிஆர் கட்டினார் , நடிகர்   திலகம் சிவாஜி கணேசன்
கட்டினார்  அறிஞர் அண்ணா  , பெருந்தலைவர் காமராஜ் கட்டினார்
 என்றெல்லாம் டி.வியில்சொல்லி தமிழ்ப் பாரம்பரியத்தை உணர்த்தி

 வேஷ்டியைக்      கட்டச்சொல்கிறார்கள்  .இன்னும் பல பிரபலங்களும் வேஷ்டிக்கான பல பிராண்டு   விளம்பரங்களில்   நடிக்கிறார்கள்
 ( அதைக்கட்டினால் உனக்கும்  கம்பீரம் வரும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் ).விளம்பரப்படுத்தும் அளவுக்கு  மாநகரங்களில்  வேஷ்டி கட்டும் மக்களின் எண்ணிக்கை  கூடியதாகத் தெரியவில்லை

ரொம்ப நாள் முன்னடி நீயா நானா வில் இந்த  டாபிக்கை வைத்து ஒரு

ரஞ்சகமான  நிகழ்ச்சி   நடத்தினார்கள்(  பங்கேற்க வந்தவர்கள் அனைவரும் ,

 வேஷ்டியில் -- கோபிநாத் உள்பட )
 .முடிவில் வேஷ்டி"நிலைத்து நிற்கும் பெருமை உடைத்து   " என்று முடித்தார்கள் .

என்னுடைய சந்தேகம் என்னவென்றால் என்ன     தான் விளம்பரம் கொடுத்தாலும்
வேஷ்டி விற்பனை அதிகரித்தாலும்  வேஷ்டிகட்டிய மனிதர்களை
ஏன்   பெரிய மால்களிலும் ஷாப்பிங்  ஏரியாவில் அல்லது  அலுவலகத்திலும்

 அவ்வளவாகப் பார்க்க முடிவதில்லை .?

நான் திருச்சியில் படித்துக் கொண்டிருந்த  போது  நேஷனல் காலேஜில்

 மட்டும்  வேஷ்டி கட்டிய மாணவர்கள்  வருவார்கள் .

நான்  TCSஇல் வேலை செய்தபோது  ஒரு வெள்ளிக்கிழமை ஒரு புராஜெக்டில்  வேலை செய்பவர்கள் அனைவரும்    வேஷ்டி மற்றும் புடவை  கட்டிக்கொண்டு   வந்தனர் .
அரசியல் பிரமுகர்கள்    சில பொது நிகழ்ச்சிகளில்  பங்கேற்போர்  மற்றும் கல்யாணத்தின் போது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வேஷ்டி உடையில் வருகிறார்கள்

 இப்பொழுது பாக்கெட் வைத்த வேஷ்டி கூட வந்துவிட்டது.

வேஷ்டி என்னதான் பாரம்பரிய உடை என்று பெருமையோடு  பேசப்பட்டாலும் , மேலும் சில வசதிகள் மாற்றங்கள் செய்து விற்பனை செய்தாலும் அதைப் பராமரிக்கும் விதம் சற்றே கடினமானது என்ற காரணத்தால் ஜீன்ஸ்    லுங்கி , பேன்ட் போன்ற உடைகளை விடவும் மக்களால்  அணியப்படுகிறது என்றே தோன்றுகிறது  .

 ம்ம்ம் .... பார்ப்போம் ஜீன்ஸுக்கு  ஒரு வாழ்வு வந்தால்   வேஷ்டிக்கும்   ஒரு வாழ்வு வராதா என்ன?


Monday, 12 October 2015

மாறியது நெஞ்சம் !


நானும் ஒரு 15 வருடங்களாக ஜப்பானிய மொழி என்றில்லாமல் எனக்குத் தெரிந்த மற்றும் தெரியாத ஆனால்  டிமாண்டு உள்ள பாடங்களை மாணாக்கர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன் .
 எப்பவுமே மாணவர்களின் மன நிலையைக் கூர்ந்து கவனித்துத்தான் நான் பாடம் நடத்துவேன் ..

அதில் நான் உணர்ந்த ,தெரிந்து கொண்ட ஒரு முக்கியமான விஷயம் ஒன்று
 உண்டு  .

சமீப காலங்களில் மாணவர்களின் நடத்தையில் அதாவது பாடம் சொல்லிகொடுக்காமல் ஒரு சிறிய (பிரேக் )இடைவெளி விடும் நேரங்களில் மாணவர்கள் என்ன பண்ணுவார்கள் என்பதில் ஒரு பெரிய மாற்றமே
நிகழ்ந்துள்ளது .

பழைய காலங்களில் சொல்லப்போனால் நான் படித்த காலங்களிலும்  மற்றும் ஒரு 15 வருடம் முன்பு கூட இது போன்ற பிரேக் விடும் நேரங்களில்
 "அப்பாடா !"என்று பக்கத்தில் உள்ளவர்களுடன் பேச ஆரம்பித்து விடுவோம் .வகுப்பே ஒரு சந்தைக்கடை அளவுக்கு கூச்சல் போடும் .

ஆனால் இப்போது ,அப்படி இல்லை .பசங்கள் ரொம்பவே சமத்து .

அடுத்தவனிடம் நொய் நொய் என்று பேசி வம்பு பண்ணுவதில்லை.
முன்பெல்லாம் நான் தயவு செய்து கத்தாதீர்கள் , காது செவிடாகும் போல உள்ளது என்றெல்லாம் நான் அத்தனை பேர் சத்ததிற்கும் மேலே ஹை டெசிபலில் காட்டுக்கத்தல் கத்திய காலமும் உண்டு .
கிளாஸ் நடுவில் கூட பழைய காலம் மாதிரி அவ்வளவாகப் பேசிப் பொழுதைக் கழிப்பதில்லை .
அப்படியானால் மாணவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்கிறீர்களா?
வேறே என்ன ?

பிரேக்கிற்காகவே காத்துக்கிட்டிருந்த மாதிரி ....

 ஹஹ்ஹ...ஹா ....டச் ஸ்கிரீன் உள்ள போனில் விரலால் தடவித் தடவி ...........


Saturday, 10 October 2015

வலைப்பதிவர் திருவிழா

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா 2015 சிறக்க வாழ்த்துவோம்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Thursday, 1 October 2015

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -
தனி ஒரு மனிதனுக்குச் சுத்தமான காற்று இல்லையேல் ஜகத்தினை   நாம் அழிக்க வேண்டாம் அது தானே அழிந்து விடும் .

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு என்பது  ஒரு ஒய் திஸ் கொலவெறி ரேஞ்சுக்கு    சமீபத்திய நாட்களில் எல்லார் வாயிலும் பூந்து புறப்பட்டு வரும் பேச்சு .இது பற்றி எழுதித் தீர்த்த தாள்கள் பலப்பல .உலகத்தை குறை சொல்லன்னும் என்றால் நாமெல்லாம் தொண்டை கிழியப் பேசுவோமே  தவிர செயலில் என்றும் இறங்குவதில்லை . அதுதான் பெரிய ஆபத்தே .
சுற்றுச் சூழல் மாசைக்  குறைக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் இதுவரை  சில மாற்றங்கள் மற்றும்  ஏற்பாடுகள் செய்திருந்தாலும் அவைகள் எல்லாம் 1%கூட சுற்றுச் சூழலில் கணிசமான மாற்றத்தைக் கொண்டுவரவில்லை .
நம்பாவிட்டால் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை  -   குப்பை கொட்டும் இடத்தைச் சென்று பார்த்து வந்தால் புரியும் .

விளை நிலத்தை நாம் இரசாயன உரங்கள் போட்டு குட்டிச் சுவராக்கியத்தின் விளைவு  இன்று பல வித வியாதிகளும் நம் உடம்பில் வந்து வாடகை இன்றிக் குடி புகுந்துவிட்டன . .அடுத்த தெருவுக்குப் போகணும் என்றால் கூட வாகனம் தான் .1981 ல் கோவையில் நான் இருந்த போது சனிக்கிழமை இரவு என்றால் மக்கள் இரண்டாம் காட்சி  பார்த்து விட்டு பார்த்த சினிமாவினைப் பற்றி  விமரிசனம் பண்ணிக்கொண்டு  நடந்து தான்  வீட்டுக்கு வருவார்கள்  , அது எவ்வளவு தூரமானாலும்  சரி.
 இப்பொழுது யாருமே நடப்பதில்லை , சர்க்கரை வியாதி இரத்தக் கொதிப்பு போன்ற  வாழ்கை முறை சம்பந்தப்பட்ட வியாதிகளின் தலை நகரமாக இந்தியா ஆனது தான் கண்ட பலன் .நாம் சுவாசிக்கும் காற்று உண்ணும் உணவு வசிக்கும் இடம் எல்லாவற்றையும் ஓவர் டயம் வேலை பார்த்து  மாசு படுத்தி விட்டோம்.
குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரம் காதில் நாராசமாக ஒலிக்கிறது என்று ஒருகாலத்தில்  (60 மற்றும் 70 களில்)கருதப்பட்டாலும் இப்போது யாரும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை.இது ஒரு வரவேற்க்கத்தக்க மாற்றமே .

அதுபோலவே இப்போதும் குவிந்து கிடக்கும் குப்பை மலைகளின் புகைப்படம் மற்றும் அதனால் விளையும் தீங்குகள் பற்றியும் தொலைக்காட்சி  வானொலி
  பேஸ் புக் மற்றும் செய்தித் தாள் போன்ற ஊடகங்கள் வாயிலாகவும் மக்களுக்குக் காண்பித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் .

தொழிற்சாலைகள் வெளிவிடும்  சல்பர் டை-ஆக்சைடு     , நைட்ரஜன்    ஆக்சைடு,அம்மோனியா  மற்றும் , வோலடைல் ஆர்கானிக்  காம்பௌண்ட்கள் போன்றவற்றை நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க விதிமுறைகளை கட்டாயம் தொழிற்சாலைகள்  பின்பற்றுமாறு சட்டம் செய்ய வேண்டும் .


வாகனங்களின் எண்ணிக்கை கூடக் கூட அவை வெளி விடும் அசுத்தக் காற்றும் அதிகமாகின்றது எனவே பொது வாகனங்கள் அதாவது public Transport வாகனங்களின் எண்ணிக்கையை அதிகம் செய்தால் தனி மனிதர்கள் உபயோகிக்கும் வாகனங்களும் குறையும்  இது சுற்றுச் சூழலில் ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் .
மக்கள் சைக்கிளை உபயோகப்படுத்துவதையும் நடந்து போவதற்கான  வசதிகளையும் கொண்ட  ரோடுகளை நிறைய உண்டாக்கினால்  வரும் நன்மைகள் பலப்பல..
ஒரு 40 வருடம் முன்பு சைக்கிளில் வரும் மாணவர்கள் மிகக் குறைவு .ஸ்கூட்டர் வேன், இவைகள் அறவே கிடையாது. பள்ளியோ கல்லூரியோ நடந்து வரும் மாணவர்களும் ஆசிரியர்களும் தான் அந்தக்  காலத்தில்  நடந்து தான்  வருவார்கள் .

ஒன்று நாம் பிளாஸ்டிக் இல்லாத வாழ்வை வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது  எறியும் பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சிசெய்ய சில மேலை நாடுகளை அப்படியே பின் பற்ற வேண்டும் .
உதாரணமாக சீனாவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொடுத்தால் சப் வே டிக்கட்கள் கொடுக்கிறார்கள் .இதனால் மக்களும்பயனடைகிறார்கள் , பிளாஸ்டிக் பாட்டில்கள் தனியே சேகரிப்பதும் எளிதாக்கப் படுகிறது .பிளாஸ்டிக் பாட்டில்கள் மானாவாரியாக வெளியில் தூக்கி எறிவதும் தடுக்கப் படுகிறது.
. மேலும் விபரங்களுக்கு http://www.beijingrelocation.com/blog/in-beijing-you-can-buy-a-subway-ticket-with-empty-plastic-bottles/என்ற இணைப்பைச் சொடுக்கவும் .
 அதே போல் கோக கோலா பாட்டில்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சாமான்கள் ஏற்றிச்செல்ல உதவும்  மிதவைப்படகு கூட யு டியுபில் பார்த்தேன். எந்த நாடு  எந்த மொழி என்று யாமறியேன் பராபரமே  என்றாலும் . https://www.youtube.com/watch?v=mMGDudFMIqA  என்ற இணைப்பைச் சொடுக்கினால் எப்படிப் பண்ணலாம் என்ற விஷயம் புரிகிறது.
மீகாங்கில் கூட பிளாஸ்டிக் பாட்டில் களை உபயோகித்துச் செய்த படகின் வீடியோவினை https://www.youtube.com/watch?v=-WdqCRDCsU0
என்ற இணைப்பில் காணலாம்

நாமும் வீடுகளில் பாட்டில்களைத் தூக்கி எறியாமல் அவற்றை சிறிய சிறிய செடிகளை வைக்க உபயோகப் படுத்தி  சுவர்களில் தோட்டம் அமைக்கலாம். மேலதிக    விபரங்களுக்கு   என்கிற  இணைப்பைப்  பார்க்கவும் . 

காய்கறிகள் வாங்குவோர்களும்  காய்கறி களைத் தனித்   தனியே   வைக்கத்  துணியினால் ஆன  சிறிய சிறிய பைகளை  மட்டுமே உபயோகிக்க வேண்டும்  என்று சட்டம் கொண்டு வர வேண்டும் . கடைகளும் எப்படி பிளாஸ்டிக் பைகளுக்கு என்று தனியே காசு வாங்குகிறார்களோ அதுபோல துணிப்பைகளுக்கும் காசு வாங்க வேண்டும் .  .  பிளாஸ்டிக் பை கிடைக்காது என்ற நிலை வந்தால் தானாகவே துணிப்பைகளை மக்கள் உபயோகிக்க ஆரம்பிப்பார்கள் . ஆரம்பத்தில் ஹெல்மெட்டுக்கு வரும் விமரிசனங்கள்  போல  சொல்லப்போனால்  வழக்கு பதியப்பட்டு கோர்ட்டுக்குப்  போகும் நிலை கூட வரும்
ஆனாலும் தளராது அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனர்களும்  மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

அதேபோல  குழந்தைகளுக்கும் பெரியவர்களும் சாப்பாட்டு டப்பா மற்றும் வீட்டில் மளிகைப் பொருட்கள் வைக்கும் டப்பா  போன்ற வீட்டு    உபயோகப் பொருட்களில் பிளாஸ்டிக்கை   முடிந்த வரை  தவிர்த்து எவர்சில்வரில் வைத்துக் கொள்வதை ஊடகங்கள்  மூலம் மக்களிடையே பரப்ப வேண்டும் .

 சத்தமில்லாத உலகம்  சண்டையில்லா நாட்கள் போல   இரசாயன உரம் இல்லாத பயிர்கள் ,இரசாயனங்கள் கலவாத சுத்தீகரிக்கும் பொருட்கள் (  Home Cleaning products   )போன்றவற்றை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்
 முடிந்த வரை ஒவ்வொரு தனி மனிதனும் , விழிப்புணர்வு முகாம்களும் ஊடகங்களும் ஒன்றுபட்டுச் செய்தால்  நிச்சயம் நாம் சுற்றுச் சூழல் மாசைக் கட்டுப்படுத்தலாம் .
எல்லோரும் சேர்ந்து கூவினால் பொழுது விடிய சாத்தியக்  கூறு  நிச்சயம் உள்ளது.

உறுதி மொழி :
(1)இந்தப் படைப்பு  எனது சொந்தப் படைப்பே
(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும்மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது
(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்று உறுதி கூறுகிறேன் .


45 Ideas of How To Recycle Plastic Bottles    DesignRulz.com 45 Ideas of How To Recycle Plastic Bottles    DesignRulz.com

Friday, 18 September 2015

வங்கித் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு .உபயோகமான லிங்க்

  திரு கவிப்பிரியன் வேலூர் அவர்கள் கேட்டுகொண்டபடி வங்கித் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு வேண்டி இந்த லிங்கை அனுப்புகிறேன் .


https://app.box.com/s/lnwjc28clrt1yatmzt71  (mainly ibps clerks 1 to 10 and other SSC papers)










OTHER FACEBOOKS PAGE LINKS USEFUL




இதைத் தவிர மஹெந்திராஸ்நடத்தும் ஆன்லைன் டெஸ்டும் உபயோகமாக இருக்கும் .



தேவை எனில் வகுப்புகளிலும் சேரலாம் .
ஆனாலும் நமது முயற்சி 90 பங்கு என்பதை மறக்கவேண்டாம்.

இளம் வயதினரின் கலாச்சாரம


 பழைய காலத்தில் எல்லாம் ஒரு வீட்டுத் திருமணத்திற்குக் கணவன் மனைவி இருவரும் போனால் அவர்கள் வீட்டு வைபவத்திற்கு எதிர் மரியாதை கொடுக்கும் விதமாக இவர்களும் தம்பதி சகிதமாகப் போய் வருவார்கள் .
மொய்ப் பணத்திலும் அதே மாதிரியான  ஃ பார்முலா  தான் .
ஆனால் இவை எழுதப்படாத சட்டம்.
 இன்றைய இளம் வயதினரின்
கலாச்சாரமும் கிட்டத்தட்ட அதே மாதிரித்தான்.
 ஆனால் அது ஃ பேஸ் புக் லைக் போட   மற்றும்  பிறந்த வாழ்த்துக்களுக்கு இந்த ரூல் ஃ பாலோ பண்ணுகிறார்கள் .

 சொல்லப்போனால் வாழ்க்கையே ஃ பேஸ் புக்கிற்கு மட்டுமேஎன்றே  சுருக்கி விட்ட தலைமுறை இந்தத் தலைமுறை என்று கூடச் சொல்லலாம்.

 என் உறவினர் மகளுக்கு   வங்கிப் பரிக்ஷை எழுத  உபயோகப்படும் சில லிங்கு களை நான் இ-மெயில் மூலம் அனுப்பினேன் .
அந்த லிங்குகள் வந்தன ,நன்றி என்ற ஒரு பதில்  இ-மெயிலோ அல்லது அந்த லிங்குகள் உபயோகமாக இருந்தனவா என்பது பற்றிய தகவல் இதுவரை இல்லை .
ஆனால் செம காமெடி என்னவென்றால்அந்தப்  பொண்ணு மிகச் சம்பிரதாயமாக என் ஃ பேஸ் புக் போஸ்டிங்குகளுக்கு அனுதினமும் மறவாமல் லைக் போடுகிறது .

ஃ பேஸ் புக் கை ஓதாமல் ஒரு நாளும் இருக்காத தலைமுறையின் குணாதிசயங்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.

Saturday, 12 September 2015

புது கட்ஜெட்

எனக்கு எப்பவுமே கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க செய்யப்  பிடிக்கும் . அதே போல் செய்பவர்களையும் பிடிக்கும் 
சொல்லப்போனால் என் வாழ்க்கையில்  நான் செய்த நிறைய விஷயங்கள் உறவினர் வட்டாரங்களில்  கிட்டத்தட்ட ஒரு கொலம்பஸ் மாதிரி .
முதலில்  நான் .
அப்போது ஒரு ஈ காக்காய் ( அதான் சுற்றமும் நட்பும் ) உனக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம் ? பிறகு என்னைப் பின்பற்றி ............ ஹி.............
 என் சமையலும்  கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும் .
புதுப் புது கட்ஜெட்கள் வாங்குவதில் இஷ்டம் உண்டு .
அதில் என்னைக் கவர்ந்த ஒன்று ,ஒரே வாணலியில் ஒரே சமயத்தில் மூன்று கறிஅல்லது மூன்று காய் வதக்கும் படியாக உள்ள வாணலி . இது ஜப்பான்  மற்றும் கொரியாவில்  தான் கிடைக்கும் போல .இந்தியாவில் இல்லை .எப்போ வருமோ ,
p2upcorrigerupup.jpg

Saturday, 11 July 2015

முரண்பாடுகள்


 நாம் வாழும் சமுதாயத்தில் ,உலகில் உள்ள  முரண்பாடுகள் பற்றி சீரியஸாக ஏதோ சொல்லப்போகிறேன் என்று நினைக்கவேண்டாம் .

விளம்பரங்கள் எனும் அலை அல்ல சுனாமியால் இழுத்துச்செல்லப்பட்டு  கன்னா பின்னா என்று சாமான்களை வாங்கிக் குவிக்கிறோம் .
உதாரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கறிகாய்கள் அத்தனையையும் கூட  வெறும் ஐந்தே நிமிடத்தில் கட் செய்யும் திறமை மிக்க  வெஜிட்டபிள் கட்டர், அதுவும் சிரித்துக் கொண்டேகட் செய்யலாம் . (இதில் காமெடி என்ன வென்றால்  கட் பண்ணுவது சில சமயம் ஆணாகக் கூட இருக்கின்றனர்  ).


 அதை வாங்கி வந்து வீட்டில் கட் பண்ணும் ஆணோ பெண்ணோ விளம்பர நாயகன் /நாயகி  மாதிரி  சிரிக்காமல்  எப்போதும் போல உர்........ மூஞ்சி தான் .

  அரை மணியில் சமைக்ககூடிய சமையல் உபகரணங்கள்
ஏகப்பட்ட தினுசில் ...........
,சமைத்து அப்படியே பரிமாறலாம் மாதிரியான பாத்திரங்கள் , அதுவும் சில வகை வெள்ளை செராமிக் பாத்திரங்கள் கழுவக்கூட வேண்டாமாம் .
லேசாக ஒரு துணி கொண்டு துடைத்தால் போதுமாம் .

சானல்கள் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு வேப்பிலை அடிக்கிறார்கள் .
 ஒரு நடிகரோ நடிகையோ சொன்னால் போதும் ...........
 அவ்வளவுதான்
நாமும் அதாவது படித்த நாமும் அவற்றை  வாங்கிக்
குவிக்கிறோம்.
நமக்கு நேரம் முக்கியம் என்பதால் பணத்தைப் பார்ப்பதில்லை .

அந்த gadgets எல்லாம் அரை மணியில் சமைக்கும் என்றால் ஏன் வீட்டில் சமைக்காமல் வெளியில் இத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் ?
எல்லா ஹோட்டல்களிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றதே ஏன்?

Gadgets  குத்தமா?  நம்ம குத்தமா?

Friday, 10 July 2015

வந்துட்டாங்கைய்யா வந்துட்டாங்க

  நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதும் பதிவு .
 முதுகு வலி வந்தபின் என் மகன் ஒரு ஐ பேட் வாங்கிக்கொடுத்தான் .அதே நேரம் என் லேப்-டாப்பும் கொஞ்சம் மக்கர் பண்ண ஆரம்பித்துவிட்டதால் பதிவு எழுதவில்லை.ஐ பேட் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை .அதில் காப்பி பேஸ்ட்பண்ண வரவில்லை.வேகமாக  ஆங்கிலமே டைப்  செய்ய இன்னும் வரவில்லை . காப்பி பேஸ்ட் அதில் ஏடாகூடமாக வருகிறது.

அதனாலேயே காப்பி பேஸ்ட்பண்ணி காமெண்டு கூட போட முடிய வில்லை .
டீச்சிங் தவிர வேறு வேலையும் எடுக்க வில்லை . எனவே ஒரே ஒரு லெவல் மட்டும் மிச்சம் வைத்துள்ள ஜப்பானிய மொழிப் பரீட்சை யாவது எழுதலாமே என்று எண்ணி வெகு சிரத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.


பரீட்சைக்கு ஒரு 10 நாள் முன்னே இருக்கும் .
திடீரென்று ஒரு நாள் பதிவர் திரு சரவணன் (ஸ்கூல் பையன்   ) அவர்கள்  போனில்  உங்களைப் பற்றி வலைச்சரத்தில் எழுதி உள்ளேன் என்றார் .

 அவருடன் தொலைபேசியில் தொடர்புடன் இருந்தேன் . பிறகு  எப்படியோ நின்றுவிட்டது (ஏதோ  வேலை அது இது என்றெல்லாம் புருடா விட இது என்ன ஆபீஸ் லீவு அப்ளை பண்ணுகிறோமா என்ன ).  ஆஹா நம்மளையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இந்த உலகில் ஒருவர் இருக்கிறாரே என்று  மனசு ரொம்பவே  மானாட மயிலாட ஆடியதென்னவோ உண்மை .

பரீட்சை எழுதும்  ஸ்கூலில் தான் முதல் முதலில் திரு சரவணன் (ஸ்கூல் பையன்   ) அவர்களையும் அவர் மனைவியையும் (  மனைவியும் ஜப்பானிய மொழி கற்கிறார் ) சந்தித்தேன்.


படிப்பிலேயே முழு கவனமும் இருந்ததால் வீடு குப்பை போல மற்றவர் கண்களுக்குத் தெரிந்தாலும் எனக்கு என்னவோ ஒரு ஒரு குப்பையும் படிப்பில் எனக்கு இருந்த ஆர்வத்தின் மௌன சாட்சிகளாய்த்தான் தென்பட்டது. ( குப்பையையும் கலைக்கண்ணோடு பார்க்கும் ...... ஹா ....ஹா. நிறுத்திக்கிறேன்).
திரு சரவணன் (ஸ்கூல் பையன்   ) அவர்கள்  போனில்  பேசியபின் லேப் டாப்பையும் சரிபண்ணிவிட்டு
  வீட்டையும்  ஒழுங்காக வைத்துவிட்டு எழுத ஆரம்பிக்கிறேன். 

Tuesday, 10 June 2014

காரமான கடுகு சைஸு பதிவு


குடும்ப வேலைகள் ஜாஸ்தி ஆனபடியால் பிளாக் பக்கம் வரமுடியவில்லை .

எனவே ஒரு குட்டியூண்டு ஆனால் க்யூட்டான ஒரு பதிவு.

 நேற்று வழக்கம் போல் ஹி..... ஹி .... பிசியாக இருந்தபோது ஒரு போன்

வந்தது. பிரமோஷனல் அழைப்பு.

மேடம் .... நாங்கள் எங்கள் நிறுவனத்தின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும்

விதமாக மக்களிடையே சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு  குறிப்பாக  Future savings

(எதிர்கால சேமிப்பு ) ஏற்படுத்தும் வகையில்     .......

நான் அந்தப் பெண்ணைத் தொடரவிடாமல் Future savings  பற்றியா என்றேன் .

அந்தப் பெண் மிக உற்சாகம் அடைந்து  ஆமா மேடம்  ஆமா மேடம்  என்றாள்.

சரி  எனக்கு ஒரு உதவி செய்வாயா என்றேன் .

என்ன உதவி தேவை சொல்லுங்க எது வேணாலும் செய்வோம் என்றாள்.

ஒண்ணுமில்லே  மேட்டர்  ரொம்ப சிம்பிள்  எனக்கு Future income க்கு வழி செய்து

கொடுத்தால்  நான் என்Future savings   சை உங்களிடம் போடுகிறேன் என்றேன் .

பதிலே பேசாமல் போனை வைத்து விட்டாள்.

 நாம எப்பூடி ?

Thursday, 24 April 2014

ஓட்டுப் போட்டேன் !


 தேர்தல் சமயத்தில் எல்லோரும் எழுதித் தீர்த்து விட்டார்கள் .அதுவும் பக்கம் பக்கமாக !
நாம மட்டும் ஒண்ணுமே எழுதலேன்னா எப்புடி ?
அதன் விளைவுதான் இந்த சிறிய பதிவு.

காலை நேரம் என் மகனுக்கான காலை உணவு (எங்களுக்கும்  சேர்த்துத்தான்). தயாரித் துக் கொண்டிருந்தேன் பையன் குளித்து முடித்து ஓட்டுப் போட கிளம்பினான்
.நானோ செம பிஸி 
எங்கே ஓட்டுப் போடத்தானே?
ம் ...
அப்படீன்னாக்க என் ஓட்டையும் போட்டுடேன் என்றேன் .
சும்மா ஒரு லுக் விட்டான் .பாருங்கள்

வேலைக்காரியும் அம்மா கீழே போய் ஓட்டு போடப்போறேன் .

ஏதாவது செய்யணுமா என்றாள்.

சரி அவ்வளவு தூரம் போறியே அப்படியே என் ஓட்டையும் போட்டுடேன் என்றேன் .
அம்மா ....நீங்க இருக்கிங்களே .....  என்று சொல்லிவிட்டு மேலே ஒன்றும் பேசவில்லை .

என் கணவரிடமும் இதையே சொன்னேன் .

அவரும் இதே போல்  மறுத்துவிட்டார்.

எல்லா மானேஜ்மெண்டு புத்தகங்களும்
திறமையாக வேலைகளை delegate அல்லது  அவுட் சோர்சு பண்ணும் என்கிறார்கள் .

யாரும் செய்தால் தானே .

பிறகு நானே போய் ஓட்டுப் போட்டு வந்தேன் .

Sunday, 20 April 2014

நினைவுகள்: கர்வமும் ஒரு அழகே !

நினைவுகள்: கர்வமும் ஒரு அழகே !: கர்வம் என்றாலே எதோ டாஸ்மாக் சமாச்சாரம் மாதிரி நம்மை எங்கோ படு பாதாளத்தில் தள்ளிவிடும் என்றும் எந்த சூழ்நிலையிலும் கர்வம் என்பதே கூடாது...

கர்வமும் ஒரு அழகே !


கர்வம் என்றாலே எதோ டாஸ்மாக் சமாச்சாரம் மாதிரி

நம்மை எங்கோ படு பாதாளத்தில் தள்ளிவிடும் என்றும்

எந்த சூழ்நிலையிலும் கர்வம் என்பதே கூடாது என்றும்

சங்க கால மற்றும் சமகால இலக்கியங்களிலும் கூறப்படுகின்றது

மற்றும் பாடப் புத்தகங்களில் மனப்பாடப்பகுதிக்கு இது சம்பந்தப்பட்ட

செய்யுள்கள் களை உருத்தட்டாத நம்மவர்கள் குறைவு.

ஆனால் எனக்குச் சின்ன வயசிலிருந்தே எனக்கு இதில் சுத்தமாக

உடன்பாடில்லை ,

பக்திக்கதைகளும் சரித்திரக் கதைகளும் பல  உதாரண கதா  பாத்திரங்களைக்

கொண்டு இதை விலாவரியாக விளக்குகிறது.

ஹிட்லர் முசோலினி ஆகியவர்களின் சுயசரிதையும்  போன நூற்றாண்டின்

வாழ்ந்து அழிந்த மனிதர்களின்  உதாரணமாக சின்னக் குழந்தைக்குக் கூட

போதிக்கப்பட்டது.

நானும் கூட மார்க்குக்காக மட்டுமே நெட்டுருப் போட்டேன் .

அதை எதிர்த்து நான் வாதம் செய்தால் 'திமிர் ' என்ற பட்டம்  மற்றும்

      'விதண்டா வாதம் வீண் நேரம்  'என்ற அறிவுரைகளால்

என்  வாதத்தின் பக்கம் உள்ள நியாயத்தைப் பலரும்

ஏன் உண்மையைச் சொன்னால் ஒருத்தர் கூட ஏற்றுக்கொள்ளவில்லை .

 சரி இப்பவாவது சொல்லுவோம் யாராவது ஒத்துக்கிறாங்களா பாப்போம் .

 கர்வமும் ஒரு அழகே !

கர்வத்தைப் போய்  அழகு என்று சொல்வதா என்று கோபப்பட வேண்டாம் .

கர்ணன்  படத்தில் மஞ்சள் முகம் நிறம் மாறி என்ற பாடலில் சிவாஜி தனக்கு

குழந்தை பிறக்கப் போகிறது என்று "க ர்ணன் தந்த பிள்ளை என்றால்" என்ற

வரிகளுக்கு  கர்வமாக ஒரு லுக் விடுவதை கிட்டத்தட்ட 50 வருடங்கள்

ஆகியும் இன்றும் நாம் ரசிக்கவில்லையோ ?

 கர்வமும் அழகாக இருப்பதால்தானே  நாம் ரசிக்கிறோம்

வீரபாண்டியக் கட்டபொம்மனின் கர்ஜிக்கும் கர்வ  வசனம் பற்றி  அதிகம்

சொல்லவேண்டியதே இல்லை.

இலங்கேஸ்வரன் நாடகத்தில்

ஆர்எஸ் மனோகரின் கர்வமான நடையையும்  வசனங்களையும்

ரசித்து  பல நாட்கள் அந்த நாடகத்தை வெற்றிகரமாக ஓட விட்டதும் நாம்தான்.


ஒரு பத்து வருடம் முன்  படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனின்

கர்வமான நடிப்பை ரசித்ததும் சாட்சாத் நாம்தான்!

அட  விடுங்க அதெல்லாம் !

கர்வமா இருக்கிற வயசுப் பொண்ணுகளை ரசிக்கண்ணே

 " அவ கர்வம் கூட ஒரு தனி அழகுடா "ன்னு

  சில பேர் ஒரு குரூப்பா அலையரதில்லையா என்ன?

எல்லாருமே கர்வமா இருக்கறதை மனசுக்குள்ள ரசிச்சுகிட்டு

வெளியிலேபிடிக்காதமாதிரி  வேஷம் போடறாங்க!

இதுதான் உண்மை !

இவ்வளவு சொல்லியும் நான் சொல்றதை நீங்க நம்ப மறுக்கிறீங்களா?

எங்கே கொஞ்சம் கர்வமாக ஒரு லுக் வுட்டுகிட்டு

கண்ணாடியிலே உங்க மூஞ்சியை பாத்துட்டு

அப்புறம் சொல்லுங்க .


ஹி  ஹி   கர்வத்துக்கும் ஒரு தனி அழகு  இருக்கில்லே ?