Thursday, 1 October 2015

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -
தனி ஒரு மனிதனுக்குச் சுத்தமான காற்று இல்லையேல் ஜகத்தினை   நாம் அழிக்க வேண்டாம் அது தானே அழிந்து விடும் .

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு என்பது  ஒரு ஒய் திஸ் கொலவெறி ரேஞ்சுக்கு    சமீபத்திய நாட்களில் எல்லார் வாயிலும் பூந்து புறப்பட்டு வரும் பேச்சு .இது பற்றி எழுதித் தீர்த்த தாள்கள் பலப்பல .உலகத்தை குறை சொல்லன்னும் என்றால் நாமெல்லாம் தொண்டை கிழியப் பேசுவோமே  தவிர செயலில் என்றும் இறங்குவதில்லை . அதுதான் பெரிய ஆபத்தே .
சுற்றுச் சூழல் மாசைக்  குறைக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் இதுவரை  சில மாற்றங்கள் மற்றும்  ஏற்பாடுகள் செய்திருந்தாலும் அவைகள் எல்லாம் 1%கூட சுற்றுச் சூழலில் கணிசமான மாற்றத்தைக் கொண்டுவரவில்லை .
நம்பாவிட்டால் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை  -   குப்பை கொட்டும் இடத்தைச் சென்று பார்த்து வந்தால் புரியும் .

விளை நிலத்தை நாம் இரசாயன உரங்கள் போட்டு குட்டிச் சுவராக்கியத்தின் விளைவு  இன்று பல வித வியாதிகளும் நம் உடம்பில் வந்து வாடகை இன்றிக் குடி புகுந்துவிட்டன . .அடுத்த தெருவுக்குப் போகணும் என்றால் கூட வாகனம் தான் .1981 ல் கோவையில் நான் இருந்த போது சனிக்கிழமை இரவு என்றால் மக்கள் இரண்டாம் காட்சி  பார்த்து விட்டு பார்த்த சினிமாவினைப் பற்றி  விமரிசனம் பண்ணிக்கொண்டு  நடந்து தான்  வீட்டுக்கு வருவார்கள்  , அது எவ்வளவு தூரமானாலும்  சரி.
 இப்பொழுது யாருமே நடப்பதில்லை , சர்க்கரை வியாதி இரத்தக் கொதிப்பு போன்ற  வாழ்கை முறை சம்பந்தப்பட்ட வியாதிகளின் தலை நகரமாக இந்தியா ஆனது தான் கண்ட பலன் .நாம் சுவாசிக்கும் காற்று உண்ணும் உணவு வசிக்கும் இடம் எல்லாவற்றையும் ஓவர் டயம் வேலை பார்த்து  மாசு படுத்தி விட்டோம்.
குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரம் காதில் நாராசமாக ஒலிக்கிறது என்று ஒருகாலத்தில்  (60 மற்றும் 70 களில்)கருதப்பட்டாலும் இப்போது யாரும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை.இது ஒரு வரவேற்க்கத்தக்க மாற்றமே .

அதுபோலவே இப்போதும் குவிந்து கிடக்கும் குப்பை மலைகளின் புகைப்படம் மற்றும் அதனால் விளையும் தீங்குகள் பற்றியும் தொலைக்காட்சி  வானொலி
  பேஸ் புக் மற்றும் செய்தித் தாள் போன்ற ஊடகங்கள் வாயிலாகவும் மக்களுக்குக் காண்பித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் .

தொழிற்சாலைகள் வெளிவிடும்  சல்பர் டை-ஆக்சைடு     , நைட்ரஜன்    ஆக்சைடு,அம்மோனியா  மற்றும் , வோலடைல் ஆர்கானிக்  காம்பௌண்ட்கள் போன்றவற்றை நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க விதிமுறைகளை கட்டாயம் தொழிற்சாலைகள்  பின்பற்றுமாறு சட்டம் செய்ய வேண்டும் .


வாகனங்களின் எண்ணிக்கை கூடக் கூட அவை வெளி விடும் அசுத்தக் காற்றும் அதிகமாகின்றது எனவே பொது வாகனங்கள் அதாவது public Transport வாகனங்களின் எண்ணிக்கையை அதிகம் செய்தால் தனி மனிதர்கள் உபயோகிக்கும் வாகனங்களும் குறையும்  இது சுற்றுச் சூழலில் ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் .
மக்கள் சைக்கிளை உபயோகப்படுத்துவதையும் நடந்து போவதற்கான  வசதிகளையும் கொண்ட  ரோடுகளை நிறைய உண்டாக்கினால்  வரும் நன்மைகள் பலப்பல..
ஒரு 40 வருடம் முன்பு சைக்கிளில் வரும் மாணவர்கள் மிகக் குறைவு .ஸ்கூட்டர் வேன், இவைகள் அறவே கிடையாது. பள்ளியோ கல்லூரியோ நடந்து வரும் மாணவர்களும் ஆசிரியர்களும் தான் அந்தக்  காலத்தில்  நடந்து தான்  வருவார்கள் .

ஒன்று நாம் பிளாஸ்டிக் இல்லாத வாழ்வை வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது  எறியும் பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சிசெய்ய சில மேலை நாடுகளை அப்படியே பின் பற்ற வேண்டும் .
உதாரணமாக சீனாவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொடுத்தால் சப் வே டிக்கட்கள் கொடுக்கிறார்கள் .இதனால் மக்களும்பயனடைகிறார்கள் , பிளாஸ்டிக் பாட்டில்கள் தனியே சேகரிப்பதும் எளிதாக்கப் படுகிறது .பிளாஸ்டிக் பாட்டில்கள் மானாவாரியாக வெளியில் தூக்கி எறிவதும் தடுக்கப் படுகிறது.
. மேலும் விபரங்களுக்கு http://www.beijingrelocation.com/blog/in-beijing-you-can-buy-a-subway-ticket-with-empty-plastic-bottles/என்ற இணைப்பைச் சொடுக்கவும் .
 அதே போல் கோக கோலா பாட்டில்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சாமான்கள் ஏற்றிச்செல்ல உதவும்  மிதவைப்படகு கூட யு டியுபில் பார்த்தேன். எந்த நாடு  எந்த மொழி என்று யாமறியேன் பராபரமே  என்றாலும் . https://www.youtube.com/watch?v=mMGDudFMIqA  என்ற இணைப்பைச் சொடுக்கினால் எப்படிப் பண்ணலாம் என்ற விஷயம் புரிகிறது.
மீகாங்கில் கூட பிளாஸ்டிக் பாட்டில் களை உபயோகித்துச் செய்த படகின் வீடியோவினை https://www.youtube.com/watch?v=-WdqCRDCsU0
என்ற இணைப்பில் காணலாம்

நாமும் வீடுகளில் பாட்டில்களைத் தூக்கி எறியாமல் அவற்றை சிறிய சிறிய செடிகளை வைக்க உபயோகப் படுத்தி  சுவர்களில் தோட்டம் அமைக்கலாம். மேலதிக    விபரங்களுக்கு   என்கிற  இணைப்பைப்  பார்க்கவும் . 

காய்கறிகள் வாங்குவோர்களும்  காய்கறி களைத் தனித்   தனியே   வைக்கத்  துணியினால் ஆன  சிறிய சிறிய பைகளை  மட்டுமே உபயோகிக்க வேண்டும்  என்று சட்டம் கொண்டு வர வேண்டும் . கடைகளும் எப்படி பிளாஸ்டிக் பைகளுக்கு என்று தனியே காசு வாங்குகிறார்களோ அதுபோல துணிப்பைகளுக்கும் காசு வாங்க வேண்டும் .  .  பிளாஸ்டிக் பை கிடைக்காது என்ற நிலை வந்தால் தானாகவே துணிப்பைகளை மக்கள் உபயோகிக்க ஆரம்பிப்பார்கள் . ஆரம்பத்தில் ஹெல்மெட்டுக்கு வரும் விமரிசனங்கள்  போல  சொல்லப்போனால்  வழக்கு பதியப்பட்டு கோர்ட்டுக்குப்  போகும் நிலை கூட வரும்
ஆனாலும் தளராது அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனர்களும்  மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

அதேபோல  குழந்தைகளுக்கும் பெரியவர்களும் சாப்பாட்டு டப்பா மற்றும் வீட்டில் மளிகைப் பொருட்கள் வைக்கும் டப்பா  போன்ற வீட்டு    உபயோகப் பொருட்களில் பிளாஸ்டிக்கை   முடிந்த வரை  தவிர்த்து எவர்சில்வரில் வைத்துக் கொள்வதை ஊடகங்கள்  மூலம் மக்களிடையே பரப்ப வேண்டும் .

 சத்தமில்லாத உலகம்  சண்டையில்லா நாட்கள் போல   இரசாயன உரம் இல்லாத பயிர்கள் ,இரசாயனங்கள் கலவாத சுத்தீகரிக்கும் பொருட்கள் (  Home Cleaning products   )போன்றவற்றை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்
 முடிந்த வரை ஒவ்வொரு தனி மனிதனும் , விழிப்புணர்வு முகாம்களும் ஊடகங்களும் ஒன்றுபட்டுச் செய்தால்  நிச்சயம் நாம் சுற்றுச் சூழல் மாசைக் கட்டுப்படுத்தலாம் .
எல்லோரும் சேர்ந்து கூவினால் பொழுது விடிய சாத்தியக்  கூறு  நிச்சயம் உள்ளது.

உறுதி மொழி :
(1)இந்தப் படைப்பு  எனது சொந்தப் படைப்பே
(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும்மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது
(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்று உறுதி கூறுகிறேன் .


45 Ideas of How To Recycle Plastic Bottles    DesignRulz.com 45 Ideas of How To Recycle Plastic Bottles    DesignRulz.com

Friday, 18 September 2015

வங்கித் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு .உபயோகமான லிங்க்

  திரு கவிப்பிரியன் வேலூர் அவர்கள் கேட்டுகொண்டபடி வங்கித் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு வேண்டி இந்த லிங்கை அனுப்புகிறேன் .


https://app.box.com/s/lnwjc28clrt1yatmzt71  (mainly ibps clerks 1 to 10 and other SSC papers)










OTHER FACEBOOKS PAGE LINKS USEFUL




இதைத் தவிர மஹெந்திராஸ்நடத்தும் ஆன்லைன் டெஸ்டும் உபயோகமாக இருக்கும் .



தேவை எனில் வகுப்புகளிலும் சேரலாம் .
ஆனாலும் நமது முயற்சி 90 பங்கு என்பதை மறக்கவேண்டாம்.

இளம் வயதினரின் கலாச்சாரம


 பழைய காலத்தில் எல்லாம் ஒரு வீட்டுத் திருமணத்திற்குக் கணவன் மனைவி இருவரும் போனால் அவர்கள் வீட்டு வைபவத்திற்கு எதிர் மரியாதை கொடுக்கும் விதமாக இவர்களும் தம்பதி சகிதமாகப் போய் வருவார்கள் .
மொய்ப் பணத்திலும் அதே மாதிரியான  ஃ பார்முலா  தான் .
ஆனால் இவை எழுதப்படாத சட்டம்.
 இன்றைய இளம் வயதினரின்
கலாச்சாரமும் கிட்டத்தட்ட அதே மாதிரித்தான்.
 ஆனால் அது ஃ பேஸ் புக் லைக் போட   மற்றும்  பிறந்த வாழ்த்துக்களுக்கு இந்த ரூல் ஃ பாலோ பண்ணுகிறார்கள் .

 சொல்லப்போனால் வாழ்க்கையே ஃ பேஸ் புக்கிற்கு மட்டுமேஎன்றே  சுருக்கி விட்ட தலைமுறை இந்தத் தலைமுறை என்று கூடச் சொல்லலாம்.

 என் உறவினர் மகளுக்கு   வங்கிப் பரிக்ஷை எழுத  உபயோகப்படும் சில லிங்கு களை நான் இ-மெயில் மூலம் அனுப்பினேன் .
அந்த லிங்குகள் வந்தன ,நன்றி என்ற ஒரு பதில்  இ-மெயிலோ அல்லது அந்த லிங்குகள் உபயோகமாக இருந்தனவா என்பது பற்றிய தகவல் இதுவரை இல்லை .
ஆனால் செம காமெடி என்னவென்றால்அந்தப்  பொண்ணு மிகச் சம்பிரதாயமாக என் ஃ பேஸ் புக் போஸ்டிங்குகளுக்கு அனுதினமும் மறவாமல் லைக் போடுகிறது .

ஃ பேஸ் புக் கை ஓதாமல் ஒரு நாளும் இருக்காத தலைமுறையின் குணாதிசயங்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.

Saturday, 12 September 2015

புது கட்ஜெட்

எனக்கு எப்பவுமே கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க செய்யப்  பிடிக்கும் . அதே போல் செய்பவர்களையும் பிடிக்கும் 
சொல்லப்போனால் என் வாழ்க்கையில்  நான் செய்த நிறைய விஷயங்கள் உறவினர் வட்டாரங்களில்  கிட்டத்தட்ட ஒரு கொலம்பஸ் மாதிரி .
முதலில்  நான் .
அப்போது ஒரு ஈ காக்காய் ( அதான் சுற்றமும் நட்பும் ) உனக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம் ? பிறகு என்னைப் பின்பற்றி ............ ஹி.............
 என் சமையலும்  கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும் .
புதுப் புது கட்ஜெட்கள் வாங்குவதில் இஷ்டம் உண்டு .
அதில் என்னைக் கவர்ந்த ஒன்று ,ஒரே வாணலியில் ஒரே சமயத்தில் மூன்று கறிஅல்லது மூன்று காய் வதக்கும் படியாக உள்ள வாணலி . இது ஜப்பான்  மற்றும் கொரியாவில்  தான் கிடைக்கும் போல .இந்தியாவில் இல்லை .எப்போ வருமோ ,
p2upcorrigerupup.jpg

Saturday, 11 July 2015

முரண்பாடுகள்


 நாம் வாழும் சமுதாயத்தில் ,உலகில் உள்ள  முரண்பாடுகள் பற்றி சீரியஸாக ஏதோ சொல்லப்போகிறேன் என்று நினைக்கவேண்டாம் .

விளம்பரங்கள் எனும் அலை அல்ல சுனாமியால் இழுத்துச்செல்லப்பட்டு  கன்னா பின்னா என்று சாமான்களை வாங்கிக் குவிக்கிறோம் .
உதாரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கறிகாய்கள் அத்தனையையும் கூட  வெறும் ஐந்தே நிமிடத்தில் கட் செய்யும் திறமை மிக்க  வெஜிட்டபிள் கட்டர், அதுவும் சிரித்துக் கொண்டேகட் செய்யலாம் . (இதில் காமெடி என்ன வென்றால்  கட் பண்ணுவது சில சமயம் ஆணாகக் கூட இருக்கின்றனர்  ).


 அதை வாங்கி வந்து வீட்டில் கட் பண்ணும் ஆணோ பெண்ணோ விளம்பர நாயகன் /நாயகி  மாதிரி  சிரிக்காமல்  எப்போதும் போல உர்........ மூஞ்சி தான் .

  அரை மணியில் சமைக்ககூடிய சமையல் உபகரணங்கள்
ஏகப்பட்ட தினுசில் ...........
,சமைத்து அப்படியே பரிமாறலாம் மாதிரியான பாத்திரங்கள் , அதுவும் சில வகை வெள்ளை செராமிக் பாத்திரங்கள் கழுவக்கூட வேண்டாமாம் .
லேசாக ஒரு துணி கொண்டு துடைத்தால் போதுமாம் .

சானல்கள் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு வேப்பிலை அடிக்கிறார்கள் .
 ஒரு நடிகரோ நடிகையோ சொன்னால் போதும் ...........
 அவ்வளவுதான்
நாமும் அதாவது படித்த நாமும் அவற்றை  வாங்கிக்
குவிக்கிறோம்.
நமக்கு நேரம் முக்கியம் என்பதால் பணத்தைப் பார்ப்பதில்லை .

அந்த gadgets எல்லாம் அரை மணியில் சமைக்கும் என்றால் ஏன் வீட்டில் சமைக்காமல் வெளியில் இத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் ?
எல்லா ஹோட்டல்களிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றதே ஏன்?

Gadgets  குத்தமா?  நம்ம குத்தமா?

Friday, 10 July 2015

வந்துட்டாங்கைய்யா வந்துட்டாங்க

  நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதும் பதிவு .
 முதுகு வலி வந்தபின் என் மகன் ஒரு ஐ பேட் வாங்கிக்கொடுத்தான் .அதே நேரம் என் லேப்-டாப்பும் கொஞ்சம் மக்கர் பண்ண ஆரம்பித்துவிட்டதால் பதிவு எழுதவில்லை.ஐ பேட் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை .அதில் காப்பி பேஸ்ட்பண்ண வரவில்லை.வேகமாக  ஆங்கிலமே டைப்  செய்ய இன்னும் வரவில்லை . காப்பி பேஸ்ட் அதில் ஏடாகூடமாக வருகிறது.

அதனாலேயே காப்பி பேஸ்ட்பண்ணி காமெண்டு கூட போட முடிய வில்லை .
டீச்சிங் தவிர வேறு வேலையும் எடுக்க வில்லை . எனவே ஒரே ஒரு லெவல் மட்டும் மிச்சம் வைத்துள்ள ஜப்பானிய மொழிப் பரீட்சை யாவது எழுதலாமே என்று எண்ணி வெகு சிரத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.


பரீட்சைக்கு ஒரு 10 நாள் முன்னே இருக்கும் .
திடீரென்று ஒரு நாள் பதிவர் திரு சரவணன் (ஸ்கூல் பையன்   ) அவர்கள்  போனில்  உங்களைப் பற்றி வலைச்சரத்தில் எழுதி உள்ளேன் என்றார் .

 அவருடன் தொலைபேசியில் தொடர்புடன் இருந்தேன் . பிறகு  எப்படியோ நின்றுவிட்டது (ஏதோ  வேலை அது இது என்றெல்லாம் புருடா விட இது என்ன ஆபீஸ் லீவு அப்ளை பண்ணுகிறோமா என்ன ).  ஆஹா நம்மளையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இந்த உலகில் ஒருவர் இருக்கிறாரே என்று  மனசு ரொம்பவே  மானாட மயிலாட ஆடியதென்னவோ உண்மை .

பரீட்சை எழுதும்  ஸ்கூலில் தான் முதல் முதலில் திரு சரவணன் (ஸ்கூல் பையன்   ) அவர்களையும் அவர் மனைவியையும் (  மனைவியும் ஜப்பானிய மொழி கற்கிறார் ) சந்தித்தேன்.


படிப்பிலேயே முழு கவனமும் இருந்ததால் வீடு குப்பை போல மற்றவர் கண்களுக்குத் தெரிந்தாலும் எனக்கு என்னவோ ஒரு ஒரு குப்பையும் படிப்பில் எனக்கு இருந்த ஆர்வத்தின் மௌன சாட்சிகளாய்த்தான் தென்பட்டது. ( குப்பையையும் கலைக்கண்ணோடு பார்க்கும் ...... ஹா ....ஹா. நிறுத்திக்கிறேன்).
திரு சரவணன் (ஸ்கூல் பையன்   ) அவர்கள்  போனில்  பேசியபின் லேப் டாப்பையும் சரிபண்ணிவிட்டு
  வீட்டையும்  ஒழுங்காக வைத்துவிட்டு எழுத ஆரம்பிக்கிறேன். 

Tuesday, 10 June 2014

காரமான கடுகு சைஸு பதிவு


குடும்ப வேலைகள் ஜாஸ்தி ஆனபடியால் பிளாக் பக்கம் வரமுடியவில்லை .

எனவே ஒரு குட்டியூண்டு ஆனால் க்யூட்டான ஒரு பதிவு.

 நேற்று வழக்கம் போல் ஹி..... ஹி .... பிசியாக இருந்தபோது ஒரு போன்

வந்தது. பிரமோஷனல் அழைப்பு.

மேடம் .... நாங்கள் எங்கள் நிறுவனத்தின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும்

விதமாக மக்களிடையே சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு  குறிப்பாக  Future savings

(எதிர்கால சேமிப்பு ) ஏற்படுத்தும் வகையில்     .......

நான் அந்தப் பெண்ணைத் தொடரவிடாமல் Future savings  பற்றியா என்றேன் .

அந்தப் பெண் மிக உற்சாகம் அடைந்து  ஆமா மேடம்  ஆமா மேடம்  என்றாள்.

சரி  எனக்கு ஒரு உதவி செய்வாயா என்றேன் .

என்ன உதவி தேவை சொல்லுங்க எது வேணாலும் செய்வோம் என்றாள்.

ஒண்ணுமில்லே  மேட்டர்  ரொம்ப சிம்பிள்  எனக்கு Future income க்கு வழி செய்து

கொடுத்தால்  நான் என்Future savings   சை உங்களிடம் போடுகிறேன் என்றேன் .

பதிலே பேசாமல் போனை வைத்து விட்டாள்.

 நாம எப்பூடி ?

Thursday, 24 April 2014

ஓட்டுப் போட்டேன் !


 தேர்தல் சமயத்தில் எல்லோரும் எழுதித் தீர்த்து விட்டார்கள் .அதுவும் பக்கம் பக்கமாக !
நாம மட்டும் ஒண்ணுமே எழுதலேன்னா எப்புடி ?
அதன் விளைவுதான் இந்த சிறிய பதிவு.

காலை நேரம் என் மகனுக்கான காலை உணவு (எங்களுக்கும்  சேர்த்துத்தான்). தயாரித் துக் கொண்டிருந்தேன் பையன் குளித்து முடித்து ஓட்டுப் போட கிளம்பினான்
.நானோ செம பிஸி 
எங்கே ஓட்டுப் போடத்தானே?
ம் ...
அப்படீன்னாக்க என் ஓட்டையும் போட்டுடேன் என்றேன் .
சும்மா ஒரு லுக் விட்டான் .பாருங்கள்

வேலைக்காரியும் அம்மா கீழே போய் ஓட்டு போடப்போறேன் .

ஏதாவது செய்யணுமா என்றாள்.

சரி அவ்வளவு தூரம் போறியே அப்படியே என் ஓட்டையும் போட்டுடேன் என்றேன் .
அம்மா ....நீங்க இருக்கிங்களே .....  என்று சொல்லிவிட்டு மேலே ஒன்றும் பேசவில்லை .

என் கணவரிடமும் இதையே சொன்னேன் .

அவரும் இதே போல்  மறுத்துவிட்டார்.

எல்லா மானேஜ்மெண்டு புத்தகங்களும்
திறமையாக வேலைகளை delegate அல்லது  அவுட் சோர்சு பண்ணும் என்கிறார்கள் .

யாரும் செய்தால் தானே .

பிறகு நானே போய் ஓட்டுப் போட்டு வந்தேன் .

Sunday, 20 April 2014

நினைவுகள்: கர்வமும் ஒரு அழகே !

நினைவுகள்: கர்வமும் ஒரு அழகே !: கர்வம் என்றாலே எதோ டாஸ்மாக் சமாச்சாரம் மாதிரி நம்மை எங்கோ படு பாதாளத்தில் தள்ளிவிடும் என்றும் எந்த சூழ்நிலையிலும் கர்வம் என்பதே கூடாது...

கர்வமும் ஒரு அழகே !


கர்வம் என்றாலே எதோ டாஸ்மாக் சமாச்சாரம் மாதிரி

நம்மை எங்கோ படு பாதாளத்தில் தள்ளிவிடும் என்றும்

எந்த சூழ்நிலையிலும் கர்வம் என்பதே கூடாது என்றும்

சங்க கால மற்றும் சமகால இலக்கியங்களிலும் கூறப்படுகின்றது

மற்றும் பாடப் புத்தகங்களில் மனப்பாடப்பகுதிக்கு இது சம்பந்தப்பட்ட

செய்யுள்கள் களை உருத்தட்டாத நம்மவர்கள் குறைவு.

ஆனால் எனக்குச் சின்ன வயசிலிருந்தே எனக்கு இதில் சுத்தமாக

உடன்பாடில்லை ,

பக்திக்கதைகளும் சரித்திரக் கதைகளும் பல  உதாரண கதா  பாத்திரங்களைக்

கொண்டு இதை விலாவரியாக விளக்குகிறது.

ஹிட்லர் முசோலினி ஆகியவர்களின் சுயசரிதையும்  போன நூற்றாண்டின்

வாழ்ந்து அழிந்த மனிதர்களின்  உதாரணமாக சின்னக் குழந்தைக்குக் கூட

போதிக்கப்பட்டது.

நானும் கூட மார்க்குக்காக மட்டுமே நெட்டுருப் போட்டேன் .

அதை எதிர்த்து நான் வாதம் செய்தால் 'திமிர் ' என்ற பட்டம்  மற்றும்

      'விதண்டா வாதம் வீண் நேரம்  'என்ற அறிவுரைகளால்

என்  வாதத்தின் பக்கம் உள்ள நியாயத்தைப் பலரும்

ஏன் உண்மையைச் சொன்னால் ஒருத்தர் கூட ஏற்றுக்கொள்ளவில்லை .

 சரி இப்பவாவது சொல்லுவோம் யாராவது ஒத்துக்கிறாங்களா பாப்போம் .

 கர்வமும் ஒரு அழகே !

கர்வத்தைப் போய்  அழகு என்று சொல்வதா என்று கோபப்பட வேண்டாம் .

கர்ணன்  படத்தில் மஞ்சள் முகம் நிறம் மாறி என்ற பாடலில் சிவாஜி தனக்கு

குழந்தை பிறக்கப் போகிறது என்று "க ர்ணன் தந்த பிள்ளை என்றால்" என்ற

வரிகளுக்கு  கர்வமாக ஒரு லுக் விடுவதை கிட்டத்தட்ட 50 வருடங்கள்

ஆகியும் இன்றும் நாம் ரசிக்கவில்லையோ ?

 கர்வமும் அழகாக இருப்பதால்தானே  நாம் ரசிக்கிறோம்

வீரபாண்டியக் கட்டபொம்மனின் கர்ஜிக்கும் கர்வ  வசனம் பற்றி  அதிகம்

சொல்லவேண்டியதே இல்லை.

இலங்கேஸ்வரன் நாடகத்தில்

ஆர்எஸ் மனோகரின் கர்வமான நடையையும்  வசனங்களையும்

ரசித்து  பல நாட்கள் அந்த நாடகத்தை வெற்றிகரமாக ஓட விட்டதும் நாம்தான்.


ஒரு பத்து வருடம் முன்  படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனின்

கர்வமான நடிப்பை ரசித்ததும் சாட்சாத் நாம்தான்!

அட  விடுங்க அதெல்லாம் !

கர்வமா இருக்கிற வயசுப் பொண்ணுகளை ரசிக்கண்ணே

 " அவ கர்வம் கூட ஒரு தனி அழகுடா "ன்னு

  சில பேர் ஒரு குரூப்பா அலையரதில்லையா என்ன?

எல்லாருமே கர்வமா இருக்கறதை மனசுக்குள்ள ரசிச்சுகிட்டு

வெளியிலேபிடிக்காதமாதிரி  வேஷம் போடறாங்க!

இதுதான் உண்மை !

இவ்வளவு சொல்லியும் நான் சொல்றதை நீங்க நம்ப மறுக்கிறீங்களா?

எங்கே கொஞ்சம் கர்வமாக ஒரு லுக் வுட்டுகிட்டு

கண்ணாடியிலே உங்க மூஞ்சியை பாத்துட்டு

அப்புறம் சொல்லுங்க .


ஹி  ஹி   கர்வத்துக்கும் ஒரு தனி அழகு  இருக்கில்லே ?

Sunday, 6 April 2014

கடவுள் நம்பிக்கை


கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய
விவாதம் காலம் காலமாக நடக்கிறது .

அதிதீவிர நாத்திகர்கள் கடைசியில் தீவிர ஆத்திகர்கள் ஆவதும் ,அதே போல் ஆத்திகர்கள் நாத்திகர்கள் ஆவதும் உண்டு .

இதில் எது சரி எது தப்பு என்ற விவாதத்திற்குள் நான் நுழையப் போவதில்லை

என்னைப் பொறுத்த வரை நான் கடவுளை நான் வேண்டியதைக் கொடுக்கும் ஒரு மேஜிக்  பவராகத் தான் நினைத்து வந்திருக்கிறேன் .

 கேட்டதைக் கொடுத்தால் காணிக்கை போட்டும் நன்றி சொல்லியும் கொடுக்காவிட்டால் கடவுளைத் திட்டவும் செய்யும் சராசரி மனுஷிதான் .நான்

ஆனால் கடவுள் பக்தியில் ஒரு சௌகரியம் இருப்பதை என் அபார்ட்மெண்ட் வேலைக் காரப் பெண்மணி எனக்கு  அறிவுறுத்தினாள்.

அவள் கணவன் ஒரு குடிகாரன் .
குடித்து விட்டு கண்ட மேனிக்கு கலாட்டா செய்யும்
  பெறு மதிப்பிற்குரிய டாஸ்மாக் வாடிக்கையாளர் .

குடிக்காத நேரங்களில் என்னவோ நல்லவன்தான்.

அவ்வப்போது அவளுக்கும் அடி விழும் .

அவளுக்கு வயது 50க்கு மேலே இருக்கும் .
மகன்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது .
ஆனாலும்  மகன்களுக்கு நிரந்தர வருமானமில்லை .
கணவனும் மனைவியும் இங்கேயே படுத்து வாழும் ஜீவன்கள்

இந்த பதிவு எழுதும் போது அவன் குடித்து விட்டுத் தான் வெளியில் கத்திக் கொண்டு இருக்கிறான்.

வேலைக் காரப் பெண்மணிஅவ்வப்போது கடவுளைத் திட்டுவாள் .
கணவனைத் திட்டுவாள் .
அதே சமயம் ஒரு சின்ன சாமி போட்டோ வுக்கு ஓசியில் கிடைக்கும் பூக்களையும்  தினமும் மறக்காமல் போடுவாள் .

இன்று காலை என் வீட்டுக்கு அவள் வந்திருந்தாள் .
கழுத்தில் ருத்திராட்ச மாலை எல்லாம் போட்டிருந்தாள்.
நெற்றியில் சந்தனம்+ குங்குமம் + பெரிய விபூதிப் பட்டை  தலையில் பூ இத்யாதிகளுடன்  இருந்தாள்.
என்ன இப்படி இருக்கிறாய் .பக்தி முத்தி விட்டதா என்றேன் .

கதவைச் சாத்துங்கம்மா என்று சொல்லிவிட்டு
மெல்லிய குரலில்
"அதில்லேம்மா .
நா இப்ப மாலை போட்டிருக்கேன்னா  நா சாமிக்கு சமானம் .
புருஷன் குடிச்சிட்டு வந்தாலும் என்னை அடிக்க முடியாது
.அவரும் அடிக்க பயப்படுவாரு
அப்படியும்குடி போதையிலே  அடிச்சாருன்னக்க நா சாமி வந்த மாதிரி குதிப்பேன் .

மிரண்டு ஒடிருவாரும்மா.
அடி தாங்க முடியலேம்மா
வேறே வழி" என்றாள்.

 கடவுளை ஒவ்வொருவரும் அவரவர் வழியில்
புரிந்துகொண்டு அவரை நம் சௌகரியத்திற்கு
 ஏற்ப உபயோகித்துக் கொள்கிறோம்
அவ்வளவே !
இதில் வாதம் தேவை இல்லை


Monday, 24 March 2014

சங்கம் எத்தனை சங்கமடி

ரொம்ப நாளா வீட்லே most of the time  இல்லாததாலே வீடே ஒரு வழியாக ஆயிருச்சு .
ஒரு  மெகா ஆப்பரேஷன் பண்ணி ஒரு வழியா பழையபடி கொண்டுவந்திட்டேன்.

அதனால் தான் பதிவே எழுதலை.

 கடைக்குப் போயிருந்தேன் .
ஒரு ரெண்டு பேர் பேசிட்டு இருந்தாங்க
ஒருத்தர் சொன்ன காமெண்டு சூப்பரா இருந்திச்சு .

வேலண்டின் டே வெங்காய டே வெளக்குமாத்து டே ன்னு அமெரிக்காகாரன் மாதிரி கொண்டாடினாலும்
நம்ம ஆளுங்க ளோட விளக்கெண்ணை புத்தி போகாது ..
லவ் பண்ணுவாங்க ஆனா ஜாதி பேர் சொல்லி காதலுக்கு குட் பை சொல்லிடுவாங்க
தேர்தலில் கூட ஜாதி மேட்டர் ரோலு ரொம்பவே !
ஃ பேஸ் புக்லெ கூட எல்லா சாதிக்காரனும் சங்கம் வச்சிருக்காங்க

அல்லார் மனசிலேயும் ஜாதிதான் நிக்கிது என்றார் .

 வீட்டுக்கு வந்த பின் ஃ பேஸ்புக் திறந்து பார்த்து சங்கம் என்று key வோர்ட்  போட்டு தேடினால் வா................ஆவ் !

 கீழே பாருங்களேன் !எவ்வளவு இன்டரஸ்டிங் ஆன சங்கங்கள் !

நீங்களும் பெரிய வாவ் போடுவீர்கள் !

இதில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்கிற பெயரில் ஏகப்பட்ட வெர்ஷன் உள்ளது சிலவற்றில் ஊர் பேர் வைத்தும்  வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்கிற பெயரில்சங்கங்கள் பல உள்ளன  .
அவைகள் எல்லாவற்றிலுமேகிட்டத்தட்ட  சிவ கார்த்திகேயன் போட்டோ தான் .!
அதன் பின் வடிவேலு  !
அவற்றில்
கம்ப்யுட்டர் மவுசுக்கு எலி மருந்து வைப்போர்சங்கம்

சனிகிழமயை சரக்கு போட்டுட்டு கொண்டாடும் சங்கம் என்கிற

சங்கங்களின் போட்டோ நெஜமாகவே கிரியேட்டிவ் ஆக இருந்தது .

சரி  சங்கங்களின் பெயர்களைப் பார்ப்போமா ?

கேள்வி கேட்போர் சங்கம்

பெண்களை கண்டால் கண்களை மூடுவோர் சங்கம்

பெண்ணை பார்த்தா மண்ணை பார்போர் சங்கம்.


முகம் கழுவும் முன் முகநூல் பார்ப்போர் சங்கம்

வேலை இல்லாமல் ஃபேஸ்புக் யூஸ் பன்னுவோர் சங்கம்

காடுனா சிங்கம் இருக்கனும் பேஸ்புக் னா எங்க சங்கம் இருக்கணும்

Like'க்குகாக life'ஐ தொலைத்தோர் சங்கம்

பேஸ்புக்கால் வீணாப்போனவர்கள் சங்கம்

லைக் கிடைக்காமல் வாடுவோர் சங்கம்

ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் திருடும் சங்கம்

வெட்டியா பேஸ்புக்கில் பிஸியா இருப்போர் சங்கம்

தார் road-ல் படுத்து தாறுமாறாக யோசிப்போர் சங்கம்

வெட்டியா இருந்தாலும் வெறித்தனமா யோசிப்போர் சங்கம்

குப்பற படுத்துகிட்டு குசும்பா யோசிப்போர் சங்கம்

வெட்டியாய் முட்டி முட்டி யோசிப்போர் சங்கம் (இதற்க்கான வடிவேலு படம்  கச்சிதமாக இருந்தது)


முட்ட மார்க் எடுத்தாலும் மூக்கு-ல விரல் வைக்கிற மாதிரி யோசிப்போர் சங்கம் (கவர் போட்டோ சிரிக்கவைத்தது )

பயங்கரமா யோசிப்போர் சங்கம்

காதலியால் கழற்றி விடப்பட்ட காளையர் சங்கம்

காதலியை விட கடைசி பெஞ்சை நேசிப்போர் சங்கம்

காதலிக்காதோர் சங்கம்

காதல நம்பி நாசமா போனவங்க சங்கம்

காதலை வெறுக்கும் அனைவரையும் வரவேற்கும் சங்கம்

 காதல் தலைவலியை தூக்கி எறிந்த காளையர் சங்கம்

காதலால் கழட்டி விடப்பட்டோர் சங்கம்

காதலை சேர்த்து வைப்போர் சங்கம்

காதல் தோல்வியடைந்தார் சங்கம்

காதலித்து கடன் பட்டோர் சங்கம்


நக்கலடிப்போர் நல சங்கம் .

இஷ்டப்பட்டு கஷ்டப்படுவோர் சங்கம்

கடன் வாங்கி கஷ்டபடுவோர் சங்கம்

பெற்றோர் சொன்னால் பெட்ரோலையும் குடிப்போர் சங்கம்

ஊமை குசும்பு  பண்ணுவோர்  சங்கம்


பாசக்கார பய புள்ளைங்க சங்கம்

சோறு வாங்கிக்கொடுத்திட்டு சொல்லிகாட்டுவோர் சங்கம்

சும்மா இருப்பவர்களை சொரன்டி விடுவோர் சங்கம்

மிஸ்டு கால் மட்டுமே கொடுப்போர் நல சங்கம்.

எதிரில் வந்த பிகரை நம்பி எதிர் காலத்தை தொலைத்தோர் சங்கம்
  
Feel பண்ணாத Female சங்கம்.

கல்யாணம் பண்ணி கதறுவோர் சங்கம்

இடி விழுந்தாலும் இடியாத இளைஞர் சங்கம்

எப்பவுமே வருத்த படாத வாலிபர் சங்கம்

மொக்கை போடும் வாலிபர் சங்கம்

வருத்தபடாத எஞ்சினீயர் சங்கம்

தப்பை எட்டி பார்போர் சங்கம்

சிரிச்சே சீரழியும் சங்கம் - S.S.S

 Engineering சேர்ந்து நொந்து போனோர் சங்கம்

இன்ஜினியரிங் சேர்ந்து நாசமாகி போனோர்சங்கம்

அதிரடியாக அரட்டை அடிப்போர் சங்கம்

கொஞ்சகூட வருத்தபடாத வாலிபர் சங்கம்

தேவை இல்லாத ஆணியை புடுங்குவோர் சங்கம்

எந்த பக்கமும் சாயாத சங்கம்

Exam ஐ ஒழிப்போர் சங்கம்

எக்ஸாம் எழுதி இடிஞ்சு போனோர் சங்கம்

பார்டர்ல பாசாகும் மக்குபசங்க சங்கம்

டென்சன் ஆகாத டெரெர்ஸ் சங்கம்

அரியர் வைத்து அறம் காப்போர் சங்கம்

Examக்கு முதல் நாள் மட்டும் படிப்போர் சங்கம்

கனவில் கார் ஓடுவோர் சங்கம்

கம்ப்யுட்டர் மவுசுக்கு எலி மருந்து வைப்போர்

தீயா வேலை செய்வோர் சங்கம்

அனுபவம் இல்லாம advice பண்ணுவோர் சங்கம்

KAARI துப்பினாலும் Kavalaye படாத சங்கம்

படிப்போரை கல்லால் அடிக்கும் சங்கம்

எவ்வளவு அடி பட்டாலும் திருந்தாத சங்கம்

  கல்யாணம் செய்துவிட்டு கடுப்பில் இருப்போர் சங்கம்

  கல்யாணம் ஆகாமல் கவலைப்படுவோர் சங்கம்

  "கருப்பா இருந்தாலும் கலையா இருப்போர் சங்கம்"

பரதேசிகளை நண்பர்களாக வைத்திருப்போர் சங்கம்

  தண்டவாளத்தில் தலை வைத்துப் படுப்போர் சங்கம்

தலயை எதிர்போரை தலையை எடுக்கும் சங்கம்

Powerstar-ஐ ஏளனம் செய்வோரை எண்ணெய் ஊற்றி எரிக்கும் சங்கம்


என்ன நடந்தாலும் போனில் photo எடுக்கும் வாலிபர் சங்கம்

புல் மப்பில் யோசிப்போர் சங்கம் ------உறுபினர்கள் வரவேற்க படுகிறார்கள்

காலையில் எட்டு மணிக்கு வேலைக்கு போவோரை போட்டு தள்ளுவர் சங்கம்

மத்தவன் கஷ்டப்பட்டு போட்டத நோகாம ஷேர் பண்ணுவோர்  சங்கம்

Odi Poravangala Theadi Poora Sangam OPTP ஓடி போரவங்கல தேடி போர சங்கம்

Danger ஐ Deposite பண்ணி வீண்வம்பை வட்டியாக வாங்குவோர் சங்கம்

கிட்டத்தட்ட same   டாபிக்குகளில் இன்னும் நிறைய உள்ளது .

சூப்பரா இருக்கில்லே

தமிழனுக்கு உள்ள கிரியேட்டிவிட்டிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு !


டிஸ்கி :ஆனால் இது வரை பூரிக்கட்டையால் அடிப்போர் சங்கமும் 
பூரிக்கட்டையால் அடி வாங்குவோர் சங்கமும் ஆரம்பிக்கவில்லை.





Sunday, 9 March 2014

விடுமுறைக்குப் பின் ......

 கடந்த 5 வாரங்களாக வேலைக்குப் போக ஆரம்பித்ததால் பிளாக் பக்கம் வரவில்லை . காலை 7.45க்குக் கிளம்பினால் திரும்பி வர 8 மணி ஆகிறது என்பதால் நெட்டில் மெயில் மட்டும் செக் பண்ணிவிட்டு படுத்துவிடுவேன் .
ஆபிசில் தான் 9 மணி நேரம் கம்பியூட்டர் கூட பேசிக் கொண்டிருப்பதால் வீட்டுக்கு வந்தபின் கம்பியூட்டரில்  ஏன்திரும்பவும் என்று பிளாக் எழுதவில்லை .
நேற்று வெளி வேலை இருந்ததால் பாரி முனை சென்றேன் . சரி திரும்ப வரும்போது ஆட்டோ வில் வரலாம் என்றால் பழைய கதை தான்.அதே போல மீட்டர் கணக்கு வராது என்கிறார்கள் ஒரு வழியாக ஒரு ஆட்டோ டிரைவர் மீட்டர் போட்டார் .ஆனால் அந்த ஆட்டோ மீட்டர் மிக விநோதமாக 00:7t:7t
என்று காட்டியது . இதில் எதோ உள் கூத்து இருக்கு என்று புரிந்தது.ஒரு பத்துஆட்டோ வாவது பேரம் பேசினேன் . யாருமே மீட்டர் பற்றி கண்டுகொள்ளவே இல்லை .
நமக்கேன் வம்பு என்று பேசாமல் பஸ்ஸில் வந்து விட்டேன் .கிட்டத்தட்ட
ஒரு மாதமாக சென்னைக்குள் எங்குமே போகவில்லை .ஆபிஸ் விட்டால் வீடு வீட்டை விட்டால் ஆபிஸ் .
ஆபீஸிற்கும் போய்க்கொண்டு தினம் தினம் அல்லது வாரத்திற்கு ஒரு மூன்று
பதிவாவது போடும் பதிவர்களின் திறமை கண்டு நான் வியக்கிறேன்.
எனக்குத்தான் நேர நிர்வாகம் தெரியவில்லையோ?
ஆனால் நான் சமையல் செய்வதால் நமக்கு நேரமில்லை என்று என்னை நானே சமாதனப்படுத்திக் கொள்கிறேன்.0
சென்ற வாரம் வயநாடு பக்கம் சொந்த வேலையாக சென்றிருந்தேன்.முது மலைக் காடு பக்கம் சென்றிருந்தேன். அழகோ அழகு காட்சிகள் .காமிராவின் உள்ளே சில காட்சிகளை சுயநலமாக திருடிக்கொண்டு வந்தேன் ,.
 --  --------என்ன மாதிரி இருந்தாலும் குரங்கு மட்டும் எப்படியோ அழகாகத்தான் இருக்கிறது ரகசியம் என்னவோ தெரியவில்லை.
மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கிறேன் .