Wednesday 7 July 2021

தனபாட்டா நாள் July 7 th

 தனபாட்டா  நாள்

 ஜப்பானில்  இன்று   பல மக்கள் மூங்கில் மரத்தில்  தங்கள் விருப்பங்களை    காகிதத் துண்டு களில் தொங்கவிடுகிறார்கள்

.இந்த “நட்சத்திர விழா”  ( Star Festival )ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? ஜப்பானிய மக்கள் ஏன் வண்ணமயமான காகிதத் துண்டுகளில் தங்கள் விருப்பங்களை எழுதுகிறார்கள்? 

தனபாட்டாவின்    கதை படியுங்கள் புரியும் .  

தனபாடாவின் கதையின் வரும் முக்கிய கதாபாத்திரம் இளவரசி ஓரிஹைம். அவளது காதலன் ஹிகோபோஷி,.

பால் வெளி (Milky way) என்று அழைக்கப்படும் தெய்வீக நதியில்  துணிகளைத் தயாரிக்கும் அழகிய நெசவாளிப் பெண் ஓரிஹைம் .

எப்பப் பாரு துணிகள் நெய்வதிலேயே அவள் ஈடுபட்டதால் அவளுக்குள் ஒரு சொல்ல முடியாத சோகம் .இப்படியே போய்கிட்டு இருந்தால் ..... ?

யாராவது நாம மேலே அன்பாக இருக்கமாட்டாங்களான்னு ஏங்கிகிட்டு இருந்தாள். 

அவங்க அப்பாதான் சொர்க்கத்தின் கடவுள் .

ரொம்ப வெயிட்டான பார்ட்டிதான் ஆனாலும் கஷ்டப்படணும்ன்னு எழுதியிருக்கு போல . 

பால்வெளிக்கு(Milky way)அந்தண்டைப்பக்கம்  ஒரு நல்ல சின்ன வயசுப் பையனைஅவருக்குத் தெரியும்..அவன் பேருதான்  ஹிகோபோஷி, அவன்  மாடு ஒட்டிக்கிட்டு இருக்கிறவன் .

நான் ஒண்ணு நோட் பண்ணியிருக்கேன்  

 பழைய காலக் கதைகளில் எல்லாம் மாடு  ஓட்டறவங்களுக்கு நல்ல இடத்துலே  அழகான பொண்ணு கிடைச்சு இருக்கு . 

முதல் பார்வையிலேயே  லவ்வு கிளிக் ஆயிடுச்சு .

லவ்  பண்ணிகிட்டே இருந்தாங்க . லவ்வுன்னா லவ்வு அப்படி ஒரு லவ்வு

இந்தப் பொண்ணு துணி நெய்வதையே நிறுத்திடுச்சு  அவன் மாடு ஓட்டறதை நிறுத்திட்டான் . 

மாடெல்லாம் வானத்தில், அதும் பாட்டுக்கு இஷ்டத்துக்கு சுத்தி கிட்டு இருந்துச்சாம் 

உடனே கடவுள் ரொம்ப  கோபம் ஆகிட்டு, இரண்டு காதலர்களும் ஒன்றாக  இருக்கறதுக்கு “தடா” ன்னு சொல்லிட்டாராம்   

பொண்ணு சொல்லிச்சாம் “நானில்லாமல் அவனில்லை அவனில்லாமல் நானில்லை ல லா லல்லா லா “ன்னு 

என்ன இருந்தாலும் அவர் ஓரிஹைமின்  அப்பா இல்லையா ? 

 பொண்ணு மேலயும் பாசம் ஜாஸ்தி . பொண்ணு கண் கலங்கினால் அவருக்குத் தாங்குமா  ?  சரின்னு  ஒரு கண்டிஷன்  போட்டார் .

அதாவது  ஓரிஹைம் தனது நெசவுக்குத்  திரும்பினால் அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை சந்திக்கலாம் அப்படீன்னு .

ஓவராத்தான் இருக்கு இல்ல ?

அந்த வருஷத்துக்கு ஒரு நாள் என்பது ஜூலை  மாதம் ஏழாம் நாள் . அதாவது சுலபமாக ஞாபகம் வச்சிக்கிற  மாதிரி சொல்லியிருக்கிறார் .

சரின்னு ரெண்டும் ஒத்துக்கிச்சுங்களாம் .

 அப்பா கொஞ்சம் வில்லங்கம் புடிச்ச அப்பா போலெ .

கட்டக் கடைசியா அந்த நாள்  அதாவது , நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நாள் வந்தது, 




ஆனால் பால் வெளியைக் (Milky way)  கடப்பது என்பது அவர்கள்  ரெண்டு பேருக்குமே ரொம்பக் கஷ்டமாக இருந்துச்சாம்   . அப்ப அங்கே இருந்த   magpai  பறவைக் கூட்டம் ஓரிஹைமின் சோகத்தைக் கண்டு ஐயோ பாவம்ன்னு இரக்கப் பட்டு நம்ப குரங்கு அணிலெல்லாம் ராமருக்குப் பாலம் கட்டிக் கொடுத்த மாதிரி  பாலம் கட்டிக்கொடுத்திடுச்சுங்களாம் .

அதனால்  அவங்க ரெண்டு பேரும் மறுபடியும்  ஒண்ணா வருஷத்தில் ஒரு தடவை சந்திச்சுக்கிட்டு இருக்காங்களாம் 

தனபாட்டா நாளில் மழை பெய்யும்போது, பறவைக் கூட்டம் வராது என்றும், அப்படி மழை பெய்தால் காதலர்கள் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்றும்  கூறுகிறார்கள்.

தனபாட்டா நாளில் மழை பெய்தால்  இந்த  மழையை "ஓரிஹைம் மற்றும் ஹிகோபொஷியின் கண்ணீர்" என்று சொல்கிறார்கள்

அது சரி  தனபாட்டா விருப்பத்தை எப்படி implement செய்வது?

ஒரு அட்டையை உருவாக்கி உங்கள் விருப்பத்தை எழுதுங்கள்

உங்களுக்குத் தேவை. வண்ணக் காகிதம் (ஓரிகமி காகிதம் அல்லது வண்ணக்காகிதம்) 

உங்கள் அட்டையை உருவாக்க காகிதத்தை கார்டு வடிவில்  வெட்டுங்கள். 

நூல் காட்டித் தொங்க விட ஒரு துளை செய்யுங்கள் ..

உங்கள் விருப்பத்தை எழுதுங்கள். 

நூலை  இணைக்கவும். .

இது எல்லா வயதினரும்செய்யலாம் 

 ஒரு விருப்பத்தை நினைத்து , வண்ணமயமான காகிதங்களில் (டான்சாகு) எழுதி, அவற்றை ஒரு மூங்கில் மரத்தில் கட்டுங்கள்.



 இந்த மரம் ஒரு  கோயில் சன்னதியில் இருக்கலாம் அல்லது 

உங்கள்  தோட்டத்தில் உள்ள மரத்தில் கூடக் கட்டி வைக்கலாம்  .

உங்கள் எல்லோருக்கும் தனபாட்டா  நாளின் வாழ்த்துக்கள் 

உங்கள் ஆசைகள் நிறைவேறினால் எல்லாப்  பெருமையும் தனபாட்டா விற்கே

6 comments:

  1. நம்பிக்கைகள் பலவிதம்

    ReplyDelete
  2. தனபாட்டா வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. எந்த நாடாக இருந்தாலும் இப்படியான நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. நம் ஊர் மரங்களில் தொட்டில் கட்டுவதும், தேங்காய் கட்டுவதும், நேர்ந்து கொண்டு மஞ்சள் துணியில் முடிந்து வைப்பதும் என இருப்பது போல அங்கேயும் இப்படி.

    சிறப்பான தகவல் பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான கதை. ஆனால் ஜூலை 7 வேறு யாருக்கு பிறந்த நாள்?

    ReplyDelete