Sunday 4 July 2021

காலை எழுந்தவுடன் வாத்து பட்டாம்பூச்சி முயல்

 மார்க் ட்வைன் ஒருமுறை கூறினார்  “ஒரு தவளை சாப்பிடுவது உங்கள் வேலை என்றால், காலையில் அதை முதலில் செய்வது நல்லது. இரண்டு தவளைகளைச்  சாப்பிடுவது உங்கள் வேலை என்றால், முதலில் மிகப்பெரியதை சாப்பிடுவது நல்லது. ” என்று 

... தவளையை சாப்பிடுவது என்பது  நமது வேலையைச் செய்வதாகும், இல்லையெனில் தவளை உங்களைச் சாப்பிட்டுவிடும் , அதாவது நீங்கள் நாள் முழுவதும் அதை ஒத்திவைப்பீர்கள்.

காலை எழுந்தவுடன் தவளையைச்   சாப்பிடுங்கள்  என்று சுயமுன்னேற்ற எழுத்தாளர் பிரையன் டிரேசி என்பவர் எழுதிய புத்தகம் மிகவும் பிரபலமான ஒன்று 

அதில் அவர் தவளை என்று குறிப்பிடுவது நாம் அன்றாடம் குளம் குட்டைகளில் காணும்  தவளை அல்ல  தவளை என்று   ஒரு சிம்பாலிக்காக சொல்லியிருக்கிறார் .அவ்வளவுதான் 

மார்க் ட்வைன்  சொன்னது போல  இவரும் தவளை என்று சொல்லுவது நாம் செய்ய வேண்டிய வேலைகளை .

காலை எழுந்தவுடன் நாம் அன்று செய்ய வேண்டிய வேலைகள் எதுவோ அதை முதலில் கட்டாயம் முடித்துவிட வேண்டும்   எப்படி என்றால் காலை எழுந்தவுடன் நாம் காலை உணவு உண்பது போல அதிலும் அவர் சொல்லுவது முதலில் பெரிய தவளையை சாப்பிடவேண்டும் என்கிறார்

 மிகக் கடினமான செய்யப் பிடிக்காத வேலைகளை முதலில்      செய்து விடவேண்டும் என்று சொல்கிறார்.

பிரையன் ட்ரேசியின் கூற்றுப்படி, “தவளைகளை உண்ணுதல்” என்பது தள்ளிப்போடுதலைக் கடப்பதற்கான ஒரு வேடிக்கையான வழியாகும்.

வேலைகளைத்  தள்ளிப் போடுவதை  நிறுத்துவதற்கும், குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்வதற்கும் 21 சிறந்த வழிகள்  என்ன என்பதை பற்றின புத்தகம்

இந்த புத்தகமானது நிறைய பிரதிகள் விற்பனையாகி இந்தப் புத்தகத்தால் நிறைய பேர் தங்களது லட்சியத்தை அடைந்திருக்கிறார்கள் .

எனக்கும் இதுபோன்ற சுய முன்னேற்ற நூல்கள் பலவற்றை படித்துப்   படித்து சில விஷயங்கள் மட்டுமே என்னால் பின்பற்ற முடிகிறது.

இந்த புத்தகத்தில் கூறியபடி என்னால்  தவளை எதையும் தேடி அலைய முடியவில்லை ஏனென்றால் நாம் நிறைய ஏரி  குளங்கள் எல்லாவற்றையுமே அழித்து விட்டு அதில் வீடுகளை கட்டி விட்டோம்

அப்படிப்பட்ட நாம் குளம் குட்டை மட்டும் சும்மாவா விட்டு வைப்போம் .

எனவே எனக்கு தவளை எங்கு தேடியும்  கிடைக்கவில்லை 

இருப்பினும் மனம் தளராமல் தவளைக்கு பதிலாக வேறு ஏதாவது ஒன்றை சாப்பிட்டு நாமும் நம் லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு ஆசை எனவே தவளைக்கு பதிலாக நான் வாத்து முயல் மற்றும் பட்டாம்பூச்சி இவைகளை சாப்பிடுவதற்காக இட்லியில் அதாவது இட்லி மாவில் நான் வாத்து தவளை முயல் பட்டாம்பூச்சி இவைகளை செய்து நான் சாப்பிட்டு சில லட்சியங்களை   அடைந்திருக்கிறேன் 😀

நான் சாப்பிட்ட வாத்து  முயல்  பட்டாம்பூச்சி எல்லாம் என் தட்டில் இருக்கிறது  நீங்களும் என்னைப் பின்பற்றி இதுபோல செய்தால்  உங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை நிச்சயமாக அடைய முடியும்.

பிரையன் ட்ரேசி சொன்னது இது .




 நான் செய்தது இது .




3 comments: