Monday, 13 January 2014

நானும் போனேன் புத்தகக் கண்காட்சி



சனிக்கிழமை அன்று நான்  சுமார் 3 மணி அளவில் புத்தகக் கண்காட்சிக்குப் போனேன்.

 போன வருஷத்தை விடவும் நிறைய புக் ஸ்டால்கள் இருந்தன.

நடந்து நடந்து காலெல்லாம் ஒரே வலி.
கிட்டத்தட்ட ஒரு மூணு மணி நேரம் இருந்தேன்.

 உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்க அங்கங்கே சேர் இருந்திருந்தால் நல்ல இருந்திருக்கும்.

 இல்லாட்டி என்ன நமக்கா வழி தெரியாது?

எங்கே காலியான சேர் இருக்கோ அங்கே அப்பப்போ உட்காந்து ரெஸ்ட் எடுத்துகிட்டேன்.

அக்யு  பங்க்சர் புத்தகம் ஒண்ணும் , ரியோ ஒகாவா வின் புத்தகங்கள் மூணும்  மற்ற சில குட்டி புத்தகங்கள் வாங்கினேன்.எல்லாம் சேர்ந்து ரூபாய் 890/- ஆச்சு.


தேசிக விநாயகம் பிள்ளையின் மருமக்கள்  மக்கள் வழி மான்மியம்  வாங்கலாமா என்று நினைத்தேன்.

பிறகு வாங்கலை .

  பதிவர்களில் திருமதி அகிலா அவர்களைப்
 பார்க்கலாம் என நினைத்து அவர்களுக்குப் போன் பண்ணினேன் .
ஆனால் போனை எடுக்கவில்லை   . வேறு  வேலையில் பிசியாக இருந்தார்களா என்ன தெரியவில்லை.

 மும்பையில் என்னுடன் வங்கியில் வேலை பார்த்த  தமிழ் நாட்டிலிருந்து சென்ற ஒரு நண்பரைப் பார்த்தேன்.

 அவர் தனது மகனுடன் வந்திருந்தார்.

சில பல பழைய விஷயங்களைப் பற்றியும் ,பழைய   colleague கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்
இதில் கடைகளைக் கலந்து கட்டி வைத்திருப்பதை விட   பரீட்சை சம்பந்தமான  எஸ். சந்த்  கடைகள் , குழந்தைகள் சம்பந்தமான புத்தகங்கள்  கடைகள் ஆன்மிகம் சம்பந்தமான கடைகள் என்று பிரித்து வைத்திருந்தால்
குழந்தைகள் புத்தகம் வாங்க குழந்தைகள் கடை என்று குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அலையவேண்டாமே!

குழந்தைகளை காணாமால் போக விட வேண்டாமே!

நான் இருந்த சமயம் அப்பா அம்மா வைத் தவறவிட்ட   இரண்டு குழந்தைகள் பற்றிய அறிவிப்பு வந்தது.
ஒரு குழந்தை மைக்கில் அழுது அம்மா அம்மா என்றது பாவமாக இருந்தது.

அது போல வயசானவர்களுக்கென உள்ள ஆன்மிகம் ,சமயம் சம்பந்தப் பட்ட கடைகளையும் தனியே ஒரு வரிசையில் வைத்திருந்திருக்கலாம்.ஒரு பாட்டி பாவம் கிரி டிரேடர்ஸ் எங்கே என்று அலைந்துகொண்டிருந்தது.அப்புறம்  என்கொயரியில் கேட்டு சொன்னேன்.

1979 ம் வருடத்திலிருந்தே புத்தகக் கண்காட்சி போய்க்கொண்டு இருக்கிறேன்.(வடக்கே இருந்த  வருடங்களைத் தவிர்த்து)

வடக்கே  வேறு  ஊர்களில் இப்படிப்பட்ட  பெரிய அளவிலான  கண்காட்சியை நான் பார்த்ததில்லை

அந்த விஷயத்தில் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சி  சூப்பர்.





Saturday, 4 January 2014

சர்வேக்களும் படிப்பும்.


 நான் கல்லூரி யில் படிக்கும் நாட்களில் என் ஞாபக சக்தியில் என் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை உண்டு.
 நான் நிறைய டேட்டா எல்லாம் குடுத்து எழுதுவேன்.

எனக்கு  ஏனென்று  தெரியவில்லை பொதுவாக எண்களின் மீது ஒரு இனம் புரியாத காதல் .

 வேலையை விட்ட பின்னும் சில இன்டரஸ்டிங் சர்வேக்களை நினைவில் இருத்திக் கொள்வேன்.
அதை பேசும்போது கற்பிக்கும்   போது சரியான இடங்களில் மேற்கோள் காண்பிப்பேன்.
 ஜப்பானிய மொழி கற்பிக்கும் போது பார் ஆப்பிள்  , ஒரோண் ஒண்ணு மாதிரியெல்லாம் சொல்லிக்கொடுத்தா  கட்டிய பணம் போனாலும் பரவாயில்லேன்னு ஜகா வாங்கிடுவாங்க!

நல்லா  சொல்லிக்குடுத்தாலும்   ஒரு மாதத்தில்   50%  ஏதொ காரணம் சொல்லிட்டு வரவே மாட்டங்க !
பொதுவாக வகுப்புகள் ஞாயிறு அல்லது வார நாட்கள் என்றால்  மாலை 5 மணிக்குத்தான் இருக்கும் .

எனவே சுவாரசியமாக்க நான் பல விதமான ஐடியா செய்வேன்.
ஜப்பானிய மொழி ஒன்றும்  கஷ்டமே இல்லை யாக்கும் 
.
நாம் உபயோகிக்கும்  மற்றும் தெரிந்த சொற்களோடு தொடர்பு கொண்டால்  செம ஈசி .
உதாரணமாக நமீதா என்றால்  இனிமேல் நீங்க அழணும்  என்பேன்.
(நமீதா   மேடம் ! சீரியஸாக  எடுத்துக்கொள்ள வேண்டாம் )
ஐயய்யோ முடியாது என்பார்கள்.
ஜப்பானிய மொழியில் நமீதா என்றால் அழுகை , கண்ணீர்.
நாம எது செய்யிரோமோ அதுவா மாறணும்.இல்லையா?
என்பேன்.

அது போல தமனா  (தமன்னா அல்ல) என்றால்  முட்டைக்கோஸ் .
 பசங்கள் நிஜமாகவே நோட்ஸ் எல்லாம் எடுத்துப்பாங்க.

சில மாணவர்கள் அப்ப  திரிஷான்னக்க என்னா  ஜோதிகான்னாக்க   என்னா  அப்படியெல்லாம் கேப்பாங்க.

முழுக்க முழுக்க நடிகை பேரை வச்சே ஒரு மொழியை கத்துக்க முடியாதுன்னு திட்ட வட்டமா சொல்லிடுவேன்.

ஒரு இரண்டு வருடம் கழித்து எங்காவது பார்த்தால்  
படித்தது   ஞாபகம்  இருக்கான்னாக்க  நமிதாவும் தமனா வும் மட்டுமே ஞாபகம் இருக்கு என்பார்கள். அது தனிக் கதை.

 சரி.இப்ப சர்வேக்கு வருவோம்.
ஜப்பானிய மொழியில்   Pictorial characters  களை நினைவில் கொள்ள சில கதைகள் சொல்வேன். ஆண்  என்பதற்கான கேரக்டர்
இப்படி இருக்கும்.
இது 1.      2. என்ற இரண்டு கேரக்டர்கள்  அடங்கியது.
.1 என்பது வயலையும், 2 என்பது  பவர் என்பதையும் குறிக்கும்.
 இதை ஞாபகம் வைத்துக்கொள்ள  ஒரு சர்வே பற்றி சொல்வேன்.

 (முதலிலேயே ஆண்கள் கோபம் கொள்ளவேண்டாம் என்று முன் ஜாக்கிரதையாக சொல்லிவிடுவேன்.
கடைசியில் இந்த சர்வேயை ஆண்களும்   like  போடுவார்கள்.. ஜாலி கதையில்  கற்றது மறப்பதில்லை யாதலால் )


20  வருடம் முன்பு .நா  நடத்திய சர்வே படி உலகில் உள்ள 
வேலைகளில்  ( அதாவது வீட்டு வேலை வெளி வேலை   எல்லாம் உள்ளடக்கியது . ) 90% வேலைகளைச் செய்வது பெண்களே ! 10 %   வேலை மட்டுமே ஆண்கள் .செய்கிறார்களாம் 

ஆனால் உலகில் உள்ள சொத்துக்களில் ( அசையும்  மற்றும் அசையா )90% ஆண்கள் பெயரில் தான் உள்ளது..
புரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால்    ஆண் என்றால் அவர்களுக்கு 
வயல்   (1  ) & மற்றும் அதிகாரம் (2 )உள்ளது    என்று ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்அவ்வளவே!
(இதற்கு  என்ன அத்தாட்ச்சி   என்கிற கேள்வியெல்லாம் கேக்கக் கூடாது.. மேட்டர்  ஞாபகம் வெச்சுக்கணும்  அதான் முக்கியம் )
 (அது சரியா தப்பா நியாயமா  என்கிற  விவாதம் வேண்டாம்).


 வகுப்புகள்  . சுவாரசியமாகப் போகும்..ஐந்து மணிக்குக் களைப்புடன் வந்த மாணவர்கள் கல கல என சிரித்துக் கொண்டே  வீட்டுக்குச்  செல்வார்கள்.

உணர்தற்கு அரியன்



ஆன்மிகம்
 பதிவு என்று எழுத வந்த பின் நாம வெரைட்டி ஆனா மேட்டர்களில்  எழுதணும் .
அதே சமயம் மத்தவங்க  அணுகுமுறையிலிருந்து வேறு பட்டு இருக்கிறது முக்கியம் அப்படின்னு நினைக்கிறேன்.

ஆன்மிகம் பத்தி பத்திரிகைகளில் எழுதியுள்ளேன் .
ஆனால் பதிவில்  இது வரை எழுதியதில்லை .

நமது வாழ்க்கையில்  ஆன்மிகம் கடவுள்  மற்றும்  இவற்றின்  தொடர்பு  என்ன என்பது   பற்றிய ஒரு தெளிவு எனக்கு இன்னும் இல்லை ..

மன முதிர்ச்சி இல்லையா என்றும் புரியவில்லை

 நான்   சாமி   கும்பிடும் டைப்பு என்றாலும் ஆபிஸ்  வேலை  வீட்டு  வேலை என்பவற்றை  ஓரம் கட்டிவிட்டு  சாமி கும்பிடும்  டைப்பு இல்லை .

அந்த  வேலை செய்யும் போதே சாமி பாடல்களை சொல்லிவிட்டு சாமியிடம்  நான் கும்பிட்டு விட்டதாக  டிக்  அடிக்கச் சொல்லிவிடுவேன் .
சாமி  ஒழுங்காக டிக் அடிக்கிறாரா  தெரியவில்லை .

 தூரத்தில்  உள்ள  கோயில்களுக்குப்   போகும்   வழக்கம் கிடையாது.
ஏனெனில்  எனக்கு  ரோடு கிராஸ்  பண்ணுவது  விளக்கெண்ணை  சாப்பிடுவது மாதிரி .
சென்ற ஞாயிறு அன்று  என் மாணவி  ஒருவருடன்  கு றுங்காலீஸ்வரர்  கோயில் ( கோயம்பேடு) சென்றிருந்தேன்.
புரிந்த உண்மை இதுதான் .
என்னதான்  ஆதித்யா  சானல்  சிரிப்பொலி   சானல் போன்றவைகள் இருந்தாலும் மக்களால் மகிழ்ச்சி யோடு இருக்க முடியவில்லை.

அவ்வளவு பிரச்னைகள்  என்பதை அங்கு வந்த  மக்கள் கூட்டம்   சொல்லாமல் சொல்லியது.
கொஞ்சம்   முன்னாடியே  சென்றுவிட்டோம் .

நாலரை மணி   ஆகவில்லை   யாதலால் (அங்கு நாலரை முதல் மணி வரை விசேஷம் ) பக்கத்தில்  உள்ள  சிவன்  கோயிலுக்குப் போனோம் .

அங்கு மக்கள்நமசிவாய”  என்ற மந்திரத்தை 108 முறை எழுதும் பேப்பரை வாங்கி   ஏதோ  போட்டிக்கு எழுதுவது போலே எழுதிக் கொண்டிருந்தனர்.
 கு றுங்காலீஸ்வரர்    கோயிலில்  திரு விளக்கு பூஜை போல !
.நிறையப் பெண்கள்  வாழை இல்லை மீது குத்து விளக்கு வைத்து பூஜை செய்து கொண்டிருந்தனர்.
நாங்கள் சாமி கும்பிட்டு விட்டு வந்த பின் ,
ஒரு  இடத்தில் அவர்களே   நமது  வேண்டுதல் என்னவோ அதை ஒரு   சீட்டில் எழுதித்  தருமாறு சொல்கிறார்கள் .

 நான்  எழுதலாமா  வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே
நான் வெட்டியாக இருக்கேன் என்று நினைத்தாரோ   என்னவோ தெரியவில்லை  ஒரு பெண்மணி என்னருகே  வந்து,ஒரு சீட்டை என்னிடம் கொடுத்து கொஞ்சம் எழுதித் தருகிறீர்களா என்றார்.

அவர் சொன்னதை எழுதித் தந்தேன் .

பிறகு நானும் என் வேண்டுதலை எழுதிக் கொடுத்தேன் .

மற்றவர்கள்  என்ன எழுதுகிறார்கள் என்று  ஒரு ரவுண்டு போய்ப் பார்த்தேன்.

 பரீட்சையில் காப்பி அடித்துப்   பழகியதில்லை என்றாலும் வெகு சீக்கிரம் மேட்டர் என்னவாக   இருக்கு என்று   ஒரு லுக்கில்  புரிந்துகொண்டேன்.

குறைந்தது 30%  பெண்கள் தன் கணவன் திருந்தவேண்டும்  கணவனுக்கு நல்ல புத்தி வர வேண்டும் போன்ற பல  சாலன்ஜிங்  சவால்களை சரபேச்வரருக்கு வேலை யாகக் கொடுத்தனர்.
  பத்திரிகை  ஜோக்குகளிலும்  பதிவுலகத்திலும்  மட்டுமே  மனைவிகள் கணவர்களைக் கொடுமைப் படுத்துவது போன்ற ஒரு  இமேஜு  உலாத்திக் கொண்டிருக்கிறது.

நிஜவுலகத்தில்  அப்படியே உல்டா !

டி.வி  யில் சில சானல்களில் தினமும்  நிலம் வாங்குங்க என்று  கூவிக் கூவி அழைக்கிறார்கள் .
அந்த    அழைப்பினால் கவரப்பட்டு (.ஏமாந்து...?)  நிலம் வாங்கியவர்களில் ஒரு பகுதியினராவது
கடைசியாக சரபேச்வரரிடம் வந்து சரணடைந்து  பேப்பரில் சீட்டு எழுதிக் கொடுக்கிறார்கள் .

இதை நான் என் மாணவியினிடம்  சொன்னேன் .

அவரோ  மேடம் நீங்க   இன்னொன்னு  கவனிச்சீங்களா ?
   இவங்க கொடுத்த சீட்டு  பின் பக்கம்   சாமி படிக்காம வுட்ருவாரோன்னு  நெனச்சிகிட்டு   ஜாக்கிரதையா பக்க முடிவில் வலது  சைடில்
சில பேர்  P.T.O   ல்லாம் போட்டு எழுதறாங்க என்றார் !

முதலில் சிரிப்பு வந்தாலும் 
அவங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு  என்கிற உண்மையை ஒத்துக்கொண்டே ஆகணும்.

இதே போல திருச்சி அருள்மிகு  வெக்காளி அம்மன் கோயிலுக்குப் போன போது
ஒரு  மனிதர்  பாவம் தன்  கஷ்டங்களை  எல்லாம்  நாலஞ்சு  பக்கத்துக்கு  எழுதி ஸ்டேப்ளர்  பின்  போட்டு  அதைக் கலெக்ஷன்  பண்ணுகிறவரிடம்   கொடுத்தாராம் .

மற்ற யாராவது நம்மை  சாமிக்கு லெட்டர் எழுதித் தரச்சொல்லி சொல்லும் போது   காமெடி  மேட்டர் ரொம்பவே இருக்கும்.

சில பேருக்கு நாம் வேண்டுதல் விண்ணப்பம் எழுதித் தரும்போது மனுஷங்களுக்கு லெட்டர் எழுதும்போது   எழுதற மாதிரி  அன்புள்ள ..........  கடவுளுக்கு என்றெல்லாம் எழுதச் சொல்வாங்க !

 இன்னும்  சில பேர் பாயிண்ட் பாயிண்ட்டா  நம்பரெல்லாம் போட்டு எழுதச் சொல்வாங்க!

ஒரு சிலர் அடிக்கோடு (underline ) போடுமாறு கூட சொல்வார்கள்.

 எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்குமாறு கடவுளுக்கு  ஒரு  ரிக்வெஸ்ட் கொடுப்பார்கள் .

ஏதோ எழுதினேன் என்றில்லாமல் ..............  கூட இதில் அடக்கம்

 அடுத்தவர்களுக்கு என்னும் போது காமெடியாத்தான் இருக்கு!

தலை வலியும் காச்சலும் தனக்கு வரும்போதுதான் ..........வேற விதமா இருக்கு .

ம்ஹூம் ....  கடவுளின் ரோல்  அவ்வளவா புரியல!                  

சொல்லப் போனால் கடவுள் என்பவரை  நாம் எல்லோருமே நாம் கேட்டதைக் கொடுப்பவர் ,
இன்னும் சரியாகச் சொன்னால் நமது ஆசைகளை நிறைவேற்றும் கடமை அவருக்கு உண்டு .என்றே நினைக்கிறோம்.

அதைச் சரியாகவும் சீக்கிரமும் செய்யும் பட்சத்தில்  இன்சென்டிவ் போனஸ்  போன்றவை அவருக்கு proportionate to performance   ஆகவும்  நாம்  எதிர்  மொய் எழுதும் பாணியில் செய்கிறோம் என்பதுதான் எனக்குப் புரிகிறது.
performance  சரியில்லாதபோது கார்பொரட்  பாணியில் சொல்வதானால் 
Pinkசீட் கொடுக்கிறோம். 

இப்படித்தான்  ஓர் நாள்   என் மாணவி  ஒருவரிடம் 
என் உடல்நிலை செய்துகொண்ட ஆப்பரேஷன்கள்  பற்றி பேசும்போது நான்  கடந்து  வந்த  பாதை என்பது  ராஜ வீதியாக இல்லாமல்  கற்களும்  முட்களும் நிறைந்த பாதையாக இருந்தது,
கடவுள் ரொம்பவே கஷ்டங்களை எல்லாம் கொடுத்தார் என்றேல்லாம்  
விலா வாரியாக நெஞ்சில் உணர்ச்சி பொங்க  கேட்பவர் மனம் உருக பழைய  அழுகாச்சி  சினிமா  மாதிரி சொல்லிக்கிட்டு இருந்தப்போ
அவர் ரஜனிகாந்த் ஸ்டைலில்
"மேடம் கவலைப்படாதீங்க .
கடவுள்  நல்லவங்களுக்கு   மட்டும்தான்   பரீக்ஷை  வைப்பார் 
பிறகு எல்லாம் நல்ல படியாக முடித்து வைப்பார் .
இதை எல்லாம் நீங்க ஒரு டெஸ்ட் மாதிரின்னு நெனச்சுக் கோங்க "என்றார்  ..

இது என்ன கடவுள் எனக்கு நல்ல ஒரு ஹை போஸ்ட் குடுக்க   என்ட்ரன்ஸ்  எக்சாமா  வைக்கிறார்  .என்றேன் 
கடவுளின் பக்திப் பாடல்களை நான் உச்சரிக்கிறேன் .
ஆனாலும்

என்னால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதுதான் உணர்தற்கு  அரியன் என்பதோ ?



புத்தாண்டு புலர்ந்தது



 எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

எல்லா நாளும் கன்னா பின்னா என்று மூணு மணி மூணரை மணிக்கெல்லாம் முழிப்பு வரும்
.முதல் தேதி அன்று ஐந்தரை மணிக்குத்தான் முழிப்பு வந்தது.
பக்கத்திலே இருக்கற
அசோக் நகர் ஆஞ்சநேயரைப் போய் பார்த்து ஹாப்பி நியூ இயர் ,ஹாப்பி பர்த்டே சொல்லனும்ன்னு முதல் நாளே திட்டம் போட்டேன் .

வேலை எல்லாம் முடிச்சு எட்டு மணிக்குக் கிளம்பலாமான்னு நெனச்சா க்யூ ரெண்டு தெரு தாண்டி நிக்குது.

எங்க வீட்டையும் தாண்டி க்யூ நிக்குது.

போக சோம்பேறித்தனமாக இருந்தது .

பிறகு எதோ பட்டி மன்றம்  பார்த்து ,வந்த மெயிலைப் படிக்க  ,நான்  சிலருக்கு மெயில் அனுப்ப , போனில் பேச என மணி அப்படி இப்படி சாயந்திரம் அஞ்சு மணி ஆச்சு.

கூட்டம் குறையவே இல்லே

அந்த ஆஞ்சநேயர் பெரிய உயரமான விக்ரஹம்.
எனவே  வெளியிலே நின்னே அவரை தரிசனம் பண்ணிவிட்டு  ( அதுக்கும் ஏகக் கூட்டம் )ஒரு வாக் போய்விட்டு வந்தேன்.

ஆஞ்சநேயரை வணங்க வந்தவர்கள் நிச்சயம் ஒரு இரண்டு லட்சத்தையும் தாண்டி இருக்கும் என நினைக்கிறேன்.

2001 வாக்குகளில் நான் பொதுவாக காலையில்இதே  ஆஞ்சநேயரை என்னால் முடிந்தவரை சுற்றிவிட்டு  (108 என்ற எண்ணிக்கை இல்லாமல் ) செய்த சுற்றுக்கேற்ற   Blessings கொடுக்குமாறு சொல்லிருந்த காலமும் உண்டு.

இப்போது  சனிக்கிழமை மட்டுமல்லாது எல்லா நாட்களுமே கூட்டம் இருக்கிறது.
எனவே பாதி நாட்கள் கோயில் உள்ளே செல்லாது வெளியிலிருந்தேதான்   தரிசனம்.
 ஆஞ்சநேயர் அனைவருக்கும்   ஆசி வழங்குவாராக!