Sunday 17 January 2016

பயணம்-தொடர் பதிவு

 பயணம் என்றால்  எல்லோரும் மனிதர்கள் செய்த பயணம் பற்றியே எழுதுவதால் நான் கொஞ்சம் வித்தியாசமாக   1967 முதல் என்னுடன் பயணம் செய்த என்  பென்சில்  பாக்ஸ் மற்றும் 1976 முதல் பயணம் தொடங்கி  இன்று வரை என்  கூட  இடையறாது விடை பெறாது பயணம் செய்த உண்டியல் பற்றியும் தான் நான் எழுதப் போகிறேன் .
 இது என்ன பெரிய ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா?
 மனிதர்கள் என்றால் ஏதாவது ஆபத்து வந்தால் மூளையை உபயோகித்து  உசிரைக் காப்பாத்திக்கலாம். வாயில்லாப் பொருட்கள் இவை .
 நிறைய ஊர் நிறைய வீடு சின்னக் குழந்தைகள் கை படும் இடம்வீட்டோடு இருந்த வேலையாட்கள் அடிக்கடி எனக்கு நடந்த  ஆஸ்பத்திரி அட்மிஷன்கள்  இவையே வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தைகள் இவை எல்லாவற்றையும் தாண்டி . என்னுடன் கூடவே பயணம்செய்த....... இது சாமானிய விஷயமல்லவே.

 குழந்தைகளிடமும் இந்த விஷயத்தைப் பக்குவமாகப்  புரியவைத்ததாலும்    நான் செண்டிமெண்ட் என்ற ஸ்டிக்கர் ஓட்டியதால் குழந்தைகளும் மதிப்புக் கொடுத்தனர்.
 இதில் முதலில் என்ட்ரி ஆனது என் பென்சில்  பாக்ஸ்.
  நான் ஒன்பதாவது படிக்கும் பொது வாங்கியது . அது முதல் 11வது  படிக்கும் வரை வகுப்பில் முதல் ராங்கு வாங்கினேன் . பிறகு கல்லூரியிலும் நன்கு படித்தேன் ,என் அதிருஷ்டம் 1976 ல் எமர்ஜென்சி இருந்ததால் எனக்கு செகரட்டேரியட்டில்  வேலை.
அதன் பின் எந்தப்  பரீட்சை எழுதினாலும் பரிட்சையில் ஃ பெயில் ஆனதில்லை . 
இண்டர்வியூவில் செலக்ட் ஆவதில்லை . பிறகு வங்கியில் நேரடி ஆபீசராகத் தேர்வு ஆனேன் .
 பிறகு CAIIB   பரீட்சை எழுதியபோதும் நான் படித்த லட்சணத்திற்கு 
 (  நீண்ட நேர அலுவலக வேலை மற்றும் பார்ட் 2 எழுதும்போது குழந்தைகள் பிறந்து    விட்டனர்           .) என்னைப் பாஸ் செய்ய வைத்ததே இந்த பென்சில் தான் என்ற நினைப்பு எனக்கு .
 எத்தனை எத்தனை  காலேஜின் எக்ஸாம் ஹால்கள் . 
 திருச்சி சாவித்ரி வித்யாசாலையின் எத்தனையோ   கிளாஸ் ரூம் கள் ,
திருச்சி  சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் எத்தனயோ கிளாஸ் ரூம் கள் ,செயின்ட் ஜோச ஃ ப் கல்லுரி   Laali     ஹால்  என்று லயோலாவின் betram  ஹால்
 அக்கவுண்டு டெஸ்ட் எழுதிய காலேஜு .   சென்னையில், மும்பையில் டெல்லியில் ஹைதராபாத்தில்   CAIIB   பரீட்சை எழுதிய காலேஜு  மற்றும் ஸ்கூல்கள் ....
 பிறகு நான் ஜப்பானிய மொழிப் பரீட்சை எழுதிய மீனாக்ஷி காலேஜு பச்சையப்பா காலேஜு velammal  ஸ்கூல்.
 இதைத் தவிர   என் முதல் மகன்  5 வது  வரை சில சமயங்கள்பரிட்சையின் போது . 
ஒரு பத்து வயது ஆனதும்  என் முதல் மகனுக்கு இதில் நம்பிக்கை போய்விட்டது. 
 என் இரண்டாவது மகன்  அதன் பின்  எடுத்துச் சென்றான். 10வது   12வது  மற்றும்  பல  பரீட்சை நடந்த ஸ்கூல்கள் என...  பென்சில் பாக்ஸ் சுற்றிப் பார்த்த ஸ்கூல்கள் .... ஏராளம் .
1968ல் இருந்து இவ்வளவு பரீட்சை ஹால் பார்த்தது உலகத்திலேயே இந்த ஒரு பென்சில் பாக்ஸ் மட்டுமே என்று நான் நினைக்கிறேன்.
இவ்வளவு   நீண்ட  பயணம் செய்தும்    இன்னும் சீரிளமைத் திறம் குன்றாது இருக்கும்  அழகைக்   காணக் கண் கோடி வேண்டும். இன்னும் அதைப் பொத்திப் பொத்தித்தான் பீரோவில் வைத்திருக்கிறேன் .    


   
 இந்த மண் உண்டியல்  எந்த வருடம் வாங்கினேன் என்று  ஞாபகமில்லை.
  1976 MA  பரீட்சை  முடிக்கும் முன்பே வேலை   கிடைத்தது       1976ல் சென்னை  வந்த     போது கூடவே எடுத்து  வந்தேன்  , ஹாஸ்டலில்  ஒரு மூன்று  முறை ரூம்  மாற்றி  அதன் பிறகு கோவை மும்பை டெல்லி  ( டெல்லியில்  இருமுறை வீடு மாறினோம் ) பின் திருமணம் ஆனபின் மறு படியும்    மும்பை   ( இருமுறை வீடு மாற்றம் )  ஹைதராபாத் (மூன்று முறை வீடு மாற்றம்) சென்னை  ( 6 முறை வீடு  மாற்றம்) என  என் கூடவே   பயணம் செய்து. இப்போது இங்கே உள்ளது. 

.ஒரு மண் உண்டியலை  உடைக்காமல் இத்தனை ஆண்டுகள் அதுவும் என் குழந்தைகள் கையில்கிடைக்காமல்  பாது காத்து  இவ்வளவு ஊர்  தாண்டி வருவது என்பது சாதாரண   விஷயமல்ல .
போட்டோ அப்லோடு செய்ய எவ்வளோவோ முயன்றும் முடியவில்லை . ஐ பேடில் இருந்து  முயற்சி செய்தேன் . ம்ஹூம் ...
அடுத்த முறை யாரிடமாவது கற்றுக் கொள்ள வேண்டும் .

Friday 15 January 2016

பொங்கல் வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும்,  மற்றும்
அவர்களது  குடும்பத்தினர்  அனைவருக்கும் –

எனது உள்ளம் நிறைந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
pongal festival க்கான பட முடிவு

Tuesday 5 January 2016

திடீர் பள்ளி விடுமுறைகளும் ஆரம்ப வகுப்பு மாணவர்களின் அவலமும்



 டிவியில் கடந்த இரண்டு நாட்களாக வெடிகுண்டு மிரட்டலால் பள்ளிகள் சில  ஊர்களில் மாணவர்கள்  பள்ளிக்கு வந்த பின் விடுமுறை விட்டன .

 இது டிவியில் மாணவர்கள் பைகளை மாட்டிக்கொண்டு வீடு திரும்பும் காட்சியைக்  காட்டி ஏதோ ரியலிஸ்டிக்காகக் காண்பிப்பது போன்ற தோற்றத்தைக் காண்பிக்கிறார்கள் .


 ஆனால் உண்மையில் இது வெறும் செய்தி மட்டுமே அல்ல . இதன் பின்னே உள்ள ஆரம்ப வகுப்பு மாணவர்களின் பிரச்னை மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவலை  பற்றி  ஊடகங்கள் பார்க்கத் தவறுகின்றன .

பெரிய மாணவர்கள் என்றால் அவ்வளவு பிரச்னை இல்லை , ஒன்றாவது இரண்டாவது படிக்கும் மாணவர்கள் குறிப்பாக அவர்களின் இரு பெற்றோர்களும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் அவர்கள் படும் பாடு  சொல்லி முடியாது. அவர்கள் எப்படி வீட்டுக்குப் போவார்கள் ?


சில சமயங்களில் தந்தை ஸ்கூலில் விட்டுவிட்டு எங்கோ தூரத்தில் இருக்கும் ஆபீசிற்குப் போவார் . தாயும் தூர உள்ள இடத்தில் வேலைக்குச் செல்கிறார் என்றால் அந்தக் குழந்தைகள் எப்படி வீட்டுக்குத் திரும்பிப் போவார்கள் ?

 பணம் கையில் கொடுத்தால்அந்தக் குழந்தைகள் கேட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் நிறைய என்பதால் பெற்றோர்களும் பணம் தந்து விட்டுப் போகமாட்டார்கள் .
 எனவே திரும்ப ஆட்டோவில் (தைரியமாக வருவதாக இருந்தால் ) வருவது என்பது முடியாத காரியம் .

 பெரிய  கலாட்டா நடக்கும் சில சமயங்களில் பஸ் கூட ஓடாது .

 எப்படியோ ஒரு வழியாக வீட்டுக்கு  வந்தாலும் அவர்களிடம் வீட்டு சாவி இருக்காது .டாய்லேட் போக என்ன செய்வார்கள் ?

இது போன்ற சமயங்களில் பள்ளி நிர்வாகம் கொஞ்சம் இது போன்ற குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மாலையில் பெற்றோர்கள் வரும் வரை அல்லது அவர்கள் வழக்கமாக வரும் வாகனங்கள்  (ஆட்டோ  ,பிரைவேட் வேன் போன்றவை )வரும் வரை அவர்களை பள்ளியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.

Sunday 3 January 2016

குழந்தைகளும் அழகிய கேள்விகளும்


 குழந்தைகளே அழகு ,அதுவும் அவர்கள்  படு சாமர்த்தியமாகக் கேட்கும் கேள்விகள்  இருக்கிறதே அது ரொம்பவே அழகு .
 நான் வாக்கிங் போகும்  பார்க் நடுவே குழந்தைகள் விளையாடுவார்கள் , அம்மாக்கள் பொதுவாக வாக்கிங் போவார்கள் .
 ஒரு குழந்தை  யு கேஜிஅல்லது ஒன்றாவது படிக்கும்
 அது பாட்டுக்கு விளையாடிக் கொண்டே இருந்தது. .அந்தக் குழந்தையை அதன் அம்மா வா வா நாழியாகிறது பனி வேறு பெய்ய ஆரம்பித்து விடும் . உடம்புக்கு ஆகாது சளி பிடிக்கும் .
 அப்ப பனி பெஞ்சா ஸ்கூல் லீவு விடுவாங்களா ?

  மழைக்கு வெய்யிலுக்கு மட்டும் தான் லீவு விடுவாங்க .பனிக்கெல்லாம் லீவு விடமாட்டாங்க   என்றாள் அம்மா.
 ரமணன் அங்கிள் டிவிலே பனி ரொம்பப் பெய்யும்ன்னு  சொன்னாக்க தான் லீவு விடுவாங்களா? -இதுகுழந்தை
 பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோருமே சிரித்துவிட்டோம் .
எப்ப ஸ்கூல் லீவு விடணும்ன்னு தீர்மானிக்கிற அடிஷனல் வேலையை குழந்தைகள் ரமணனுக்கு எந்த கவர்மெண்ட் ஆர்டரும் இல்லாமல் வழங்கிய  மாதிரியாகத் தோணியது . குழந்தைகளின் உலகத்தில்  G .O  தேவை இல்லை போலும்

2016 எலெக்ஷனில் ரமணன் வேட்பாளராக நின்று ஸ்கூல் போகும் குழந்தைகளுக்கு மட்டுமே அந்தத் தொகுதியில் வாக்குரிமை  என்று வைத்தால் நிச்சயம் வெற்றி அவருக்குக்கே !

Friday 1 January 2016

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .

 அனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு நல்  வாழ்த்துக்கள் .